ETV Bharat / state

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த மூன்று பேர் கைது!

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த மூன்று பேரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து போலி பாஸ்போர்ட்டுகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 30, 2023, 7:29 PM IST

சென்னை: கடந்த 19ஆம் தேதி சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சார்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலி பாஸ்போர்ட் பிரிவில் கொடுத்த புகாரில், முகமது ஷேக் இலியாஸ் என்பவர் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற ஆவணங்களை போலியாக தயாரித்திருப்பதாகவும், அதற்குத் தேவையான உபகரணங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்ததில் ராயபுரத்தைச் சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா தயார் செய்யும் ஏஜெண்டுகளை பற்றி விசாரணை மேற்கொண்டு திருவொற்றியூரைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் ராயபுரத்தைச் சேர்ந்த முகமது புகாரி ஆகியோரை நேற்று (மே 29) கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முகமது புகாரியிடமிருந்து பாஸ்போர்ட்டுகள், பாஸ்போர்ட் தாள்கள், இந்திய அரசு மற்றும் வெளிநாடுகளின் போலியான ரப்பர் ஸ்டாம்புகள், அதை தயாரிக்கும் உபகரணங்கள், கம்ப்யூட்டர்கள், ஸ்டாம்ப் அடிக்கும் இயந்திரம், 2 செல்போன்கள் என மொத்தம் 160க்கும் மேற்பட்ட பொருட்களை கைப்பற்றினர்.

பாஸ்போர்ட் வாங்கி தரும் ஏஜெண்டுகளிடம் பழைய பாஸ்போர்ட்கள் மற்றும் விசா பேப்பர்களை வாங்கி அதன் உள்பக்க தாள்களை பிரித்து எடுத்து தகுதியில்லாத இந்திய மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு போலியாக பாஸ்போர்ட்கள் மற்றும் விசா ஸ்டாம்பிங் செய்து தந்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

ஐடிஐ மற்றும் பள்ளிப்படிப்பை முடித்த இந்த மூன்று கும்பல் இலங்கையில் இருந்து பாஸ்போர்ட் தயாரிக்க தாள்கள் வரவழைத்து போலி பாஸ்போர்டுகள் தயாரித்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்கள் தயாரித்து கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த நான்கு வருடங்களாக போலி பாஸ்போர்ட், விசாக்கள் தயாரித்ததும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்து விற்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். கைதான மூன்று பேரை தவிர மேலும் பலருக்கு இந்த போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் எனவும் அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏஜெண்டுகள் மூலமாக பாஸ்போர்ட் மற்றும் விசா பெற விண்ணப்பிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக முறையான ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்ட் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களை அணுகி விசாக்களை பெறுமாறு காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தில் உயரும் செந்தில் பாலாஜி செல்வாக்கு.. ரெய்டு மூலம் முடக்க அண்ணாமலை திட்டமா? பின்னணி என்ன..?

சென்னை: கடந்த 19ஆம் தேதி சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சார்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலி பாஸ்போர்ட் பிரிவில் கொடுத்த புகாரில், முகமது ஷேக் இலியாஸ் என்பவர் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற ஆவணங்களை போலியாக தயாரித்திருப்பதாகவும், அதற்குத் தேவையான உபகரணங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்ததில் ராயபுரத்தைச் சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா தயார் செய்யும் ஏஜெண்டுகளை பற்றி விசாரணை மேற்கொண்டு திருவொற்றியூரைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் ராயபுரத்தைச் சேர்ந்த முகமது புகாரி ஆகியோரை நேற்று (மே 29) கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முகமது புகாரியிடமிருந்து பாஸ்போர்ட்டுகள், பாஸ்போர்ட் தாள்கள், இந்திய அரசு மற்றும் வெளிநாடுகளின் போலியான ரப்பர் ஸ்டாம்புகள், அதை தயாரிக்கும் உபகரணங்கள், கம்ப்யூட்டர்கள், ஸ்டாம்ப் அடிக்கும் இயந்திரம், 2 செல்போன்கள் என மொத்தம் 160க்கும் மேற்பட்ட பொருட்களை கைப்பற்றினர்.

பாஸ்போர்ட் வாங்கி தரும் ஏஜெண்டுகளிடம் பழைய பாஸ்போர்ட்கள் மற்றும் விசா பேப்பர்களை வாங்கி அதன் உள்பக்க தாள்களை பிரித்து எடுத்து தகுதியில்லாத இந்திய மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு போலியாக பாஸ்போர்ட்கள் மற்றும் விசா ஸ்டாம்பிங் செய்து தந்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

ஐடிஐ மற்றும் பள்ளிப்படிப்பை முடித்த இந்த மூன்று கும்பல் இலங்கையில் இருந்து பாஸ்போர்ட் தயாரிக்க தாள்கள் வரவழைத்து போலி பாஸ்போர்டுகள் தயாரித்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்கள் தயாரித்து கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த நான்கு வருடங்களாக போலி பாஸ்போர்ட், விசாக்கள் தயாரித்ததும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்து விற்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். கைதான மூன்று பேரை தவிர மேலும் பலருக்கு இந்த போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் எனவும் அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏஜெண்டுகள் மூலமாக பாஸ்போர்ட் மற்றும் விசா பெற விண்ணப்பிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக முறையான ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்ட் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களை அணுகி விசாக்களை பெறுமாறு காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தில் உயரும் செந்தில் பாலாஜி செல்வாக்கு.. ரெய்டு மூலம் முடக்க அண்ணாமலை திட்டமா? பின்னணி என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.