ETV Bharat / state

கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த தனியார் வங்கி ஊழியர் கைது!

author img

By

Published : Jan 23, 2020, 11:34 AM IST

Updated : Jan 23, 2020, 4:18 PM IST

சென்னை: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தனியார் வங்கி ஊழியர் உட்பட மூன்றுபேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

kanja
kanja

சென்னையை அடுத்த குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் வைஷ்ணவா பெண்கள் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி அருகே ஒரு கும்பல் கஞ்சா பொட்டலங்களுடன் நிற்பதாக சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் கல்லூரி வாயில் அருகே நின்றிருந்த இரு இளைஞர்களைப் பிடித்து விசாரித்தபோது, இருவரும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்லாவரம் பம்மல் நாகல்கேணியைச் சேர்ந்த அர்சத் ஆலம் (19) பம்மலைச் சேர்ந்த சாஜித் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு கஞ்சா கொடுத்தது, நாகல்கேணியைச் சேர்ந்த முகமது உசேன் (26) என விசாரணையில் தெரியவந்தது.

கஞ்சா பொட்டலங்களுடன் தனியார் வங்கி ஊழியர் உட்பட 3 பேர் கைது

எம்.பி.ஏ. பட்டதாரியான முகமது உசேன் ராமாவரத்தில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராகப் பணியாற்றிவருகிறார். தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் செல்போன் மூலம் கஞ்சா போதைக்கு அடிமையானவர்களைத் தொடர்புகொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களிடமிருந்து 450 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றி, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்ற பெண் உட்பட ஏழு பேர் கைது!

சென்னையை அடுத்த குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் வைஷ்ணவா பெண்கள் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி அருகே ஒரு கும்பல் கஞ்சா பொட்டலங்களுடன் நிற்பதாக சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் கல்லூரி வாயில் அருகே நின்றிருந்த இரு இளைஞர்களைப் பிடித்து விசாரித்தபோது, இருவரும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்லாவரம் பம்மல் நாகல்கேணியைச் சேர்ந்த அர்சத் ஆலம் (19) பம்மலைச் சேர்ந்த சாஜித் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு கஞ்சா கொடுத்தது, நாகல்கேணியைச் சேர்ந்த முகமது உசேன் (26) என விசாரணையில் தெரியவந்தது.

கஞ்சா பொட்டலங்களுடன் தனியார் வங்கி ஊழியர் உட்பட 3 பேர் கைது

எம்.பி.ஏ. பட்டதாரியான முகமது உசேன் ராமாவரத்தில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராகப் பணியாற்றிவருகிறார். தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் செல்போன் மூலம் கஞ்சா போதைக்கு அடிமையானவர்களைத் தொடர்புகொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களிடமிருந்து 450 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றி, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்ற பெண் உட்பட ஏழு பேர் கைது!

Intro:கஞ்சா பொட்டலங்களுடன்
தனியார் வங்கி ஊழியர் உட்பட 3 பேர் கைது
Body:கஞ்சா பொட்டலங்களுடன்
தனியார் வங்கி ஊழியர் உட்பட 3 பேர் கைது

சென்னையை அடுத்த குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் வைஷ்ணவா பெண்கள் கல்லூரி உள்ளது இந்த கல்லூரி அருகே ஒரு கும்பல் கஞ்சா பொட்டலுங்களுடன் நிற்பதாக சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது
இதனை தொடர்ந்து போலீசார் கல்லூரி அருகே சென்று பார்த்தபோது கல்லூரி வாயில் அருகே நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்த போது இருவரும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் என தெரியவந்தது

இதையடுத்து இருவரிடம் விசாரணை நடத்தினர் விசாரணையில் பல்லாவரம் பம்மல் நாகல்கேணியை சேர்ந்த அர்சத் ஆலம் (19) பம்மலை சேர்ந்த சாஜித் வயது (19) என தெரியவந்தது.
அவர்களிடம் யார்கஞ்சா விற்க கொடுத்தது என போலீசார் விசாரித்த போது நாகல்கேணியை சேர்ந்த முகமது உசேன் (26) என தெரிவித்தனர். எம்பி ஏ பட்டதாரியான
முகமது உசேன் ராமாவரத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்
இதனை தொடர்ந்து முகமது உசேனையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் செல்போன் மூலம் கஞ்சா போதைக்கு அடிமையானவர்களை தொடர்பு கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 450 கிராம் கஞ்சாவை கைப்பற்றி தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்..Conclusion:
Last Updated : Jan 23, 2020, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.