ETV Bharat / state

'திருக்குறள் படித்தால் சாதிவெறி இல்லாமல் போகும்'

author img

By

Published : Jan 16, 2020, 2:57 PM IST

சென்னை: திருக்குறளைப் படித்தால் சாதிவெறி பிடித்தவர்களுக்கும் சாதி வெறி இல்லாமல் போய்விடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினம்  அமைச்சர் ஜெயக்குமார்  மாபா பாண்டியராஜன்  thiruvallur birthday celebration in chennai  minister jeyakumar  minister pandiyarajan
திருவள்ளுவர் தினம்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின், முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன், விஜிபி சந்தோஷம் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், "திருக்குறளைப் படித்தால் சாதி வெறி பிடித்தவர்களுக்கும் சாதி வெறி இல்லாமல் போய்விடும். வள்ளுவன் வழியில் அனைவரும் செல்ல வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது. அதனால் அச்சம் கொள்ளத் தேவையில்லை" எனத் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார்

அதனைத்தொடர்ந்து பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 72 விருதுகள் தரப்படுகிறது என்றார். அதில் திமுக காலத்தில் அமைத்தது நான்கு விருதுகள்தான் எனச்சுட்டிக்காட்டிய அவர், மீதமுள்ள 68 விருதுகள் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், வருகின்ற 35ஆம் தேதி இரண்டு நபர்களுக்குப் பெரியார், அம்பேத்கர் விருதுகளை முதலமைச்சர் வழங்குவார் என்றும் பாண்டியராஜன் கூறினார்.

அமைச்சர் பாண்டியராஜன்

தொடர்ந்து பேசிய அவர், "திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து இந்து மதத்தவர் என்று கூறினாலும், ஜெயினவர் என்று கூறினாலும் அரசு எந்த அரசாணையைும் அவ்வாறு வெளியிடவில்லை. குடியரசு துணைத் தலைவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட படம் அவரின் தனிப்பட்ட விருப்பம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'அதிமுக ஆட்சி நூற்றாண்டு நீடிக்கும்' - அமைச்சர் ஜெயக்குமார்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின், முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன், விஜிபி சந்தோஷம் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், "திருக்குறளைப் படித்தால் சாதி வெறி பிடித்தவர்களுக்கும் சாதி வெறி இல்லாமல் போய்விடும். வள்ளுவன் வழியில் அனைவரும் செல்ல வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது. அதனால் அச்சம் கொள்ளத் தேவையில்லை" எனத் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார்

அதனைத்தொடர்ந்து பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 72 விருதுகள் தரப்படுகிறது என்றார். அதில் திமுக காலத்தில் அமைத்தது நான்கு விருதுகள்தான் எனச்சுட்டிக்காட்டிய அவர், மீதமுள்ள 68 விருதுகள் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், வருகின்ற 35ஆம் தேதி இரண்டு நபர்களுக்குப் பெரியார், அம்பேத்கர் விருதுகளை முதலமைச்சர் வழங்குவார் என்றும் பாண்டியராஜன் கூறினார்.

அமைச்சர் பாண்டியராஜன்

தொடர்ந்து பேசிய அவர், "திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து இந்து மதத்தவர் என்று கூறினாலும், ஜெயினவர் என்று கூறினாலும் அரசு எந்த அரசாணையைும் அவ்வாறு வெளியிடவில்லை. குடியரசு துணைத் தலைவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட படம் அவரின் தனிப்பட்ட விருப்பம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'அதிமுக ஆட்சி நூற்றாண்டு நீடிக்கும்' - அமைச்சர் ஜெயக்குமார்

Intro:Body:காங்கிரஸ் கட்சி யை திமுக waste luggage என்று கூறிய பின்னும் தன்மானா, மானமா என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டியராஜன், பெஞ்சமின், முன்னாள் எம்பி ஜெயவர்த்தன், விஜிபி சந்தோஷம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,

திருவள்ளுவர் தினம் அரசு சார்பில் கொண்டாடப்பட்டதாகவும், திருக்குறளைப் படித்தால் போதும் சாதி வெறி பிடித்தவர்களுக்கும் வெறி போய்விடும் என்றும், திருக்குறளை படித்து வள்ளுவன் வழியில் அனைவரும் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், குடியரசுத்துணைத்தலைவர் காவி உடை அணிந்தது தொடர்பான கேள்விக்கு...திருவள்ளுவர் சாதி, இன, மதம் என அனைத்தையும் கடந்தவர் என்றும் அந்த நிலை தான் அதிமுக வின் நிலையும் கூட என்று கூறினார்.

மேலும், குடியுரிமை சட்டத்திருத்ததால் சிறுப்பான்மையினர் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது அதனால் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி திமுக வை பொறுத்த வரை waste luggage என்று கூறிய பின்னும் தன்மானா மானமா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.

அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறுகையில்,

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 72 விருதுகள் தரப்படுகிறது என்றும், அதில் திமுக காலத்தில் அமைத்தது 4 தான் எனவும், 68 விருதுகள் அதிமுக ஆட்சியில் தரப்பட்டதாகவும், வரும் 20ம் தேதி 35 நபர்களுக்கு, 2 நபர்களுக்கு பெரியார், அம்பேத்கர் விருதுகளையும் முதல்வர் விருதுகள் வழங்குவார் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்..காவி உடை அணிந்து இந்து மதத்தவர் என்று கூறினாலும், ஜெயினவர் என்று கூறினாலும், அரசு எந்த அரசாணையும் வெளியிடவில்லை என்றும், குடியரசு துணைத்தலைவர் வெளியிட்ட படம் அவரின் தனிப்பட்ட விருப்பம் எனவும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.