ETV Bharat / state

'இன்னும் ஒரு ஆண்டுக்குள் ஆளில்லா விண்கலம்' - இஸ்ரோ சிவன் உறுதி

author img

By

Published : Feb 21, 2020, 12:10 PM IST

சென்னை: இன்னும் ஒரு ஆண்டுக்குள் ஆளில்லாத விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

The unmanned spacecraft will be dispatched within a year, says ISRO Sivan
The unmanned spacecraft will be dispatched within a year, says ISRO Sivan

சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், '9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இஸ்ரோவில் 2 வாரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இஸ்ரோவின் திட்டங்கள், செயல்பாடுகள் ஆகியவை குறித்தும், நவீன மேம்பாடு குறித்தும் ஒவ்வொரு பரிசோதனைக் கூடங்களுக்கும் அழைத்துச் சென்று விளக்கி பயிற்சியளிக்கப்படும். கோடை விடுமுறையில் நடத்தப்படும், இச்சிறப்பு பயிற்சியில் எல்லாப் பள்ளி மாணவர்களும் பங்கேற்க வேண்டும்.

ககன்யான் திட்டப்பணி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் செல்லக்கூடியவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 15 மாத பயிற்சிக்காக ரஷ்யாவிற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு ஆண்டுக்குள் ஆள்கள் இல்லாத விண்கலம் முதலில் அனுப்பப்படும். அதில் ரோபோட்டை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். அதன் பின்னர், அடுத்த ஆறு மாதத்தில் மனிதர்களைக் கொண்ட விண்கலம் அனுப்பப்படும். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அதேபோல் சந்திராயன்-3 திட்டப் பணிகளும் நல்லபடியாக நடந்து கொண்டு வருகிறது.

இஸ்ரோ சிவன் பேட்டி

இஸ்ரோவிற்கான வின்வெளி நிலையம் அமைப்பதற்கான பணிகள் இப்போது எதுவும் தொடங்கவில்லை. ககன்யான் திட்டப்பணி முடிந்த பின்னர், அதற்கான பணிகள் தொடங்கப்படும். இஸ்ரோவில் புதிய நவீன செயற்கைக்கோள் அனுப்பும் திட்டங்கள் நிறைய உள்ளன.

எஸ்.எஸ்.எல்.வி., போன்ற பல திட்டங்கள் உள்ளன. மீனவர்களுக்கான செயலி உருவாக்கப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதில் குறைகள் இருப்பதாக தெரிவித்தால், அதில் மாற்றம் செய்யப்படும்' என்றார்.

இதையும் படிங்க: மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் முன்மாதிரி திட்டம் ககன்யான்

சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், '9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இஸ்ரோவில் 2 வாரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இஸ்ரோவின் திட்டங்கள், செயல்பாடுகள் ஆகியவை குறித்தும், நவீன மேம்பாடு குறித்தும் ஒவ்வொரு பரிசோதனைக் கூடங்களுக்கும் அழைத்துச் சென்று விளக்கி பயிற்சியளிக்கப்படும். கோடை விடுமுறையில் நடத்தப்படும், இச்சிறப்பு பயிற்சியில் எல்லாப் பள்ளி மாணவர்களும் பங்கேற்க வேண்டும்.

ககன்யான் திட்டப்பணி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் செல்லக்கூடியவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 15 மாத பயிற்சிக்காக ரஷ்யாவிற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு ஆண்டுக்குள் ஆள்கள் இல்லாத விண்கலம் முதலில் அனுப்பப்படும். அதில் ரோபோட்டை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். அதன் பின்னர், அடுத்த ஆறு மாதத்தில் மனிதர்களைக் கொண்ட விண்கலம் அனுப்பப்படும். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அதேபோல் சந்திராயன்-3 திட்டப் பணிகளும் நல்லபடியாக நடந்து கொண்டு வருகிறது.

இஸ்ரோ சிவன் பேட்டி

இஸ்ரோவிற்கான வின்வெளி நிலையம் அமைப்பதற்கான பணிகள் இப்போது எதுவும் தொடங்கவில்லை. ககன்யான் திட்டப்பணி முடிந்த பின்னர், அதற்கான பணிகள் தொடங்கப்படும். இஸ்ரோவில் புதிய நவீன செயற்கைக்கோள் அனுப்பும் திட்டங்கள் நிறைய உள்ளன.

எஸ்.எஸ்.எல்.வி., போன்ற பல திட்டங்கள் உள்ளன. மீனவர்களுக்கான செயலி உருவாக்கப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதில் குறைகள் இருப்பதாக தெரிவித்தால், அதில் மாற்றம் செய்யப்படும்' என்றார்.

இதையும் படிங்க: மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் முன்மாதிரி திட்டம் ககன்யான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.