ETV Bharat / state

அரசு வேலை ஆசை காட்டி ரூ.1 கோடி சுருட்டல்.. சூதாட்டத்தில் மொத்தம் காலி என கைவிரித்த தபால் ஊழியர்!

சென்னை தாம்பரத்தில் தபால் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் சுமார் 1 கோடிக்கு மேல் மோசடி செய்து, அந்த பணத்தை சூதாட்டத்தில் இழந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

author img

By

Published : Dec 22, 2022, 11:14 AM IST

தபால்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ஒரு கோடிக்கு மேல் மோசடி!
தபால்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ஒரு கோடிக்கு மேல் மோசடி!
தபால்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ஒரு கோடிக்கு மேல் மோசடி!

சென்னை: மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த ரவி (61) என்பவர் தாம்பரம் தபால் நிலையத்தில் பணியாற்றி வந்த நிலையில் சில காரணங்களுக்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் ரவி தபால் நிலைய முத்திரை பொருத்தப்பட்ட சீருடையுடன் வலம் வந்து தான் பணியில் இருப்பது போல் காட்டிக்கொண்டு, தபால் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தாம்பரம், முடிச்சூர், லட்சுமி நகர், பல்லாவரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலரிடம் மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார்.

இதனால் பணம் கொடுத்து ஏமாந்த சிலர் தாம்பரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் ரவியைக் கைது செய்ததும் தகவலறிந்து அவரால் ஏமாற்றப்பட்ட சுமார் 15க்கும் மேற்பட்டோர் தாம்பரம் காவல் நிலையம் திரண்டு புகார் அளித்தனர். பின்னர் காவல் துறை விசாரணையில் இது போல் சுமார் ஒரு கோடிக்கும் மேலாகப் பலரிடம் ரவி ஏமாற்றியிருப்பது தெரியவந்ததையடுத்து. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், ஏமாற்றிய பணம் குறித்து காவல்துறையினர் ரவியிடம் விசாரித்தபோது அனைத்து பணத்தையும் சூதாட்டத்தில் இழந்து விட்டதாகவும் தன்னிடம் எந்த பணமும் இல்லையென்றும் ரவி கூறியதால் இழந்த பணத்தை எவ்வாறு பெறுவது என தெரியாமல் பாதிக்கப்பட்டவர்கள் வேதனையடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: அதிக மதிப்பெண் வழங்குவதாக மாணவிக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் மீது வழக்குப்பதிவு

தபால்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ஒரு கோடிக்கு மேல் மோசடி!

சென்னை: மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த ரவி (61) என்பவர் தாம்பரம் தபால் நிலையத்தில் பணியாற்றி வந்த நிலையில் சில காரணங்களுக்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் ரவி தபால் நிலைய முத்திரை பொருத்தப்பட்ட சீருடையுடன் வலம் வந்து தான் பணியில் இருப்பது போல் காட்டிக்கொண்டு, தபால் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தாம்பரம், முடிச்சூர், லட்சுமி நகர், பல்லாவரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலரிடம் மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார்.

இதனால் பணம் கொடுத்து ஏமாந்த சிலர் தாம்பரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் ரவியைக் கைது செய்ததும் தகவலறிந்து அவரால் ஏமாற்றப்பட்ட சுமார் 15க்கும் மேற்பட்டோர் தாம்பரம் காவல் நிலையம் திரண்டு புகார் அளித்தனர். பின்னர் காவல் துறை விசாரணையில் இது போல் சுமார் ஒரு கோடிக்கும் மேலாகப் பலரிடம் ரவி ஏமாற்றியிருப்பது தெரியவந்ததையடுத்து. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், ஏமாற்றிய பணம் குறித்து காவல்துறையினர் ரவியிடம் விசாரித்தபோது அனைத்து பணத்தையும் சூதாட்டத்தில் இழந்து விட்டதாகவும் தன்னிடம் எந்த பணமும் இல்லையென்றும் ரவி கூறியதால் இழந்த பணத்தை எவ்வாறு பெறுவது என தெரியாமல் பாதிக்கப்பட்டவர்கள் வேதனையடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: அதிக மதிப்பெண் வழங்குவதாக மாணவிக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.