ETV Bharat / state

அனுமதியின்றி இயங்கி வரும் விடுதியில் தங்கி உள்ள  மாணவிகளை 24 மணி நேரத்தில் மாற்ற உத்தரவு

author img

By

Published : Sep 10, 2022, 7:27 AM IST

தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனுமதியின்றி இயங்கி வரும் விடுதியில் தங்கி உள்ள மாணவிகளை 24 மணி நேரத்தில் பாதுகாப்பாக மாற்ற வேண்டும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனுமதி பெறாமல் இயங்கி வரும் விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விடுதியில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மாநில தலைவர் சரஸ்வதி ரங்கசாமி , உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார் , துரைராஜ் , மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்ட குழுவினர் 6ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது விடுதியில் உள்ள மாணவிகளிடம் அவர்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டு அறிந்தனர். அதுதொடர்பான அறிக்கை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அதனடிப்படையில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்கோ தானுங்கோ தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனருக்கு நடவடிக்கை உத்தவு கடிதம் ஒன்றை அனுப்பினார். .

அந்த கடிதத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அனுமதியின்றி விடுதியை நடத்திவருகிறது. ஆகவே 24 மணி நேரத்திற்குள் அங்குள்ள மாணவிகளை பாதுகாப்பாக வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும். இளம் சிறார் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் தவறு செய்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அரசு மருத்துவக்கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு மனம் திட்டம் தொடக்கம்

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனுமதி பெறாமல் இயங்கி வரும் விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விடுதியில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மாநில தலைவர் சரஸ்வதி ரங்கசாமி , உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார் , துரைராஜ் , மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்ட குழுவினர் 6ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது விடுதியில் உள்ள மாணவிகளிடம் அவர்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டு அறிந்தனர். அதுதொடர்பான அறிக்கை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அதனடிப்படையில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்கோ தானுங்கோ தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனருக்கு நடவடிக்கை உத்தவு கடிதம் ஒன்றை அனுப்பினார். .

அந்த கடிதத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அனுமதியின்றி விடுதியை நடத்திவருகிறது. ஆகவே 24 மணி நேரத்திற்குள் அங்குள்ள மாணவிகளை பாதுகாப்பாக வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும். இளம் சிறார் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் தவறு செய்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அரசு மருத்துவக்கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு மனம் திட்டம் தொடக்கம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.