ETV Bharat / state

மீண்டும் உதிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண்: ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்ட மாணவர்கள்!

author img

By

Published : Jan 11, 2021, 11:24 AM IST

இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் நினைவுத்தூண் அமைக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் இன்று (ஜன. 11) அடிக்கல் நாட்டினார்.

மீண்டும் உதிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண்
மீண்டும் உதிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண்

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் ஜனவரி 8ஆம் தேதி இரவு இடிக்கப்பட்டது. இதையடுத்து, பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டமானது வலுபெற்ற நிலையில் அதே இடத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் அமைப்பதற்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிவகொழுந்து ஸ்ரீசத்குணராஜா அனுமதி வழங்கினார்.

இதையடுத்து, இன்று (ஜன. 11) இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் அமைக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதையும் படிங்க: இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் தகர்ப்பு - கொதித்தெழுந்த தலைவர்கள்!

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் ஜனவரி 8ஆம் தேதி இரவு இடிக்கப்பட்டது. இதையடுத்து, பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டமானது வலுபெற்ற நிலையில் அதே இடத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் அமைப்பதற்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிவகொழுந்து ஸ்ரீசத்குணராஜா அனுமதி வழங்கினார்.

இதையடுத்து, இன்று (ஜன. 11) இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் அமைக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதையும் படிங்க: இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் தகர்ப்பு - கொதித்தெழுந்த தலைவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.