ETV Bharat / state

கரோனா சிகிச்சை பெற்ற காவல்துறை அலுவலரின் அனுபவம்! - The experience of a police officer recovering from corona

சென்னை: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காவல்துறை அலுவலர் ராமசாமி தனது அனுபவத்தை வெளியிட்டுள்ளார்.

காவல்துறை அலுவலர் ராமசாமி
காவல்துறை அலுவலர் ராமசாமி
author img

By

Published : May 28, 2020, 3:56 PM IST

சென்னையில் கடந்த 7ஆம் தேதி காவல்துறை அலுவலர் ராமசாமிக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் 50 விழுக்காடு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், ஆக்சிஸன் அதிகளவில் தேவைப்பட்டது.

பின்னர், ரத்த பரிசோதனையில் நோயின் தீவிரமும் கடுமையாக இருந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 20 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் கரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீட்டிற்கு திரும்பி உள்ளார். அதைத் தொடரந்து காவல்துறை அலுவலரின் அனுபவத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

கரோனா குறித்து காவல்துறை அலுவலர் ராமசாமி தனது அனுபவத்தை பகிரும் காட்சி
இது குறித்து காவல்துறை அலுவலர் ராமசாமி கூறும்போது, ”கரோனாவிற்கு சிறப்பாக சிகிச்சை அளித்தனர். வீட்டில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பது போன்றே என்னை கவனித்தனர். அவர்கள் அளித்த உணவும் நன்றாக இருந்தது. மேலும், கரோனாவால் தனது மனைவி, மகளும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீட்டிற்கு திரும்பி உள்ளனர்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கரோனா தொற்று

சென்னையில் கடந்த 7ஆம் தேதி காவல்துறை அலுவலர் ராமசாமிக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் 50 விழுக்காடு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், ஆக்சிஸன் அதிகளவில் தேவைப்பட்டது.

பின்னர், ரத்த பரிசோதனையில் நோயின் தீவிரமும் கடுமையாக இருந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 20 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் கரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீட்டிற்கு திரும்பி உள்ளார். அதைத் தொடரந்து காவல்துறை அலுவலரின் அனுபவத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

கரோனா குறித்து காவல்துறை அலுவலர் ராமசாமி தனது அனுபவத்தை பகிரும் காட்சி
இது குறித்து காவல்துறை அலுவலர் ராமசாமி கூறும்போது, ”கரோனாவிற்கு சிறப்பாக சிகிச்சை அளித்தனர். வீட்டில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பது போன்றே என்னை கவனித்தனர். அவர்கள் அளித்த உணவும் நன்றாக இருந்தது. மேலும், கரோனாவால் தனது மனைவி, மகளும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீட்டிற்கு திரும்பி உள்ளனர்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கரோனா தொற்று

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.