சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகளின் விவரங்களை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்ட அறிவிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புத்தூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சிரபும் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர்(தனி), மதுராந்தகமும் (தனி), வேலூர் மாவட்டத்தில், காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் எனப்படும் கீழ்வைத்தியனான்குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மைலம், திண்டிவனம்(தனி), வானூர்(தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெறும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் விழுப்புரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளும், திருப்பத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தனித்தொகுதிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.