ETV Bharat / state

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவச் செலவை ஏற்ற அரசு: மருத்துவர்கள் சங்கம் வரவேற்பு

மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுள்ளதற்கு மருத்துவர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

author img

By

Published : Dec 1, 2020, 5:06 PM IST

doctor ravindranath
அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவச் செலவை அரசு ஏற்றதற்கு டாக்டர்கள் சங்கம் வரவேற்பு

சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுள்ளதற்கு மருத்துவர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சமூக சமத்துவதிற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, "தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது. அந்த ஒதுக்கீட்டின் மூலம் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் ஏழை மாணவர்களுக்கான கல்விச் செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்கவேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு மூலம் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விச்செலவை தமிழ்நாடு அரசே ஏற்பதாக அரசாணை வெளியிட்டுள்ளதை வரவேற்கிறோம். தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவச் செலவை அரசு ஏற்றதற்கு டாக்டர்கள் சங்கம் வரவேற்பு

கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் இந்தாண்டிற்கான கல்விக் கட்டணத்தை ரத்து செய்திடவேண்டும். அரசு ஏற்று நடத்தும் கடலூர், ஈரோடு பெருந்துறை மருத்துவக்கல்லூரிகளில் தனியார் கல்லூரிகளைவிட கட்டணம் அதிகமாக உள்ளது.

எனவே, இக்கல்லூரிகளின் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கல்விக்கட்டணங்களை இதர அரசு கல்லூரிகளுக்கு இணையாக குறைக்கவேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக எடுக்கவேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: கடலூர், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை குறைக்கக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுள்ளதற்கு மருத்துவர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சமூக சமத்துவதிற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, "தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது. அந்த ஒதுக்கீட்டின் மூலம் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் ஏழை மாணவர்களுக்கான கல்விச் செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்கவேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு மூலம் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விச்செலவை தமிழ்நாடு அரசே ஏற்பதாக அரசாணை வெளியிட்டுள்ளதை வரவேற்கிறோம். தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவச் செலவை அரசு ஏற்றதற்கு டாக்டர்கள் சங்கம் வரவேற்பு

கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் இந்தாண்டிற்கான கல்விக் கட்டணத்தை ரத்து செய்திடவேண்டும். அரசு ஏற்று நடத்தும் கடலூர், ஈரோடு பெருந்துறை மருத்துவக்கல்லூரிகளில் தனியார் கல்லூரிகளைவிட கட்டணம் அதிகமாக உள்ளது.

எனவே, இக்கல்லூரிகளின் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கல்விக்கட்டணங்களை இதர அரசு கல்லூரிகளுக்கு இணையாக குறைக்கவேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக எடுக்கவேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: கடலூர், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை குறைக்கக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.