ETV Bharat / state

கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் மருத்துவக் கழிவுகளை அகற்றும் தனியார் நிறுவனங்கள் - டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு

author img

By

Published : Aug 10, 2023, 5:13 PM IST

மருத்துவக் கழிவுகளை அகற்றும் தனியார் நிறுவனங்கள் கடும் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதுடன், முறையாக கழிவுகளையும் அகற்றுவதில்லை என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "எம்பிபிஎஸ் படிப்பிற்கு நெக்ஸ்ட் தேர்வை திணிப்பதுபோல் பல் மருத்துவப் படிப்பிற்கும் மத்திய அரசு நெக்ஸ்ட் தேர்வை திணிப்பது கடும் கண்டனத்திற்குரியது. மருத்துவப் படிப்புகளில் மாநில உரிமைகளைப் பறிப்பது சரியல்ல. எனவே, நெக்ஸ்ட் தேர்வை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும். பிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக, தலைமை கணக்காயர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தமிழ்நாடு அரசு முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும் அரசு சாரா தனியார் மருத்துவர்கள், படிப்பை முடித்ததும் இரண்டு ஆண்டுகள் காலம் கட்டாயமாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. இரண்டாண்டு கால தற்காலிகப் பணிக்குப் பிறகு, அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. இதனால் அவர்களும் பொதுமக்களும் பயனடைந்தார்கள். மேலும், வேறு மாநில மருத்துவர்கள் அகில இந்திய ஒதுக்கீடு மூலம் அதிக இடங்களை எடுப்பதையும் தடுக்க முடிந்தது.

ஆனால் தற்பொழுது, மருத்துவர்கள் மத்தியில் வேலையின்மை அதிகரித்துள்ளது. காலிப்பணியிடங்களும் அதிகம் இல்லை. புதியப் பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. முதுநிலை மருத்துவ இடங்களும் அதிகரித்துள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பின் போதே, மூன்று மாத காலம் மாவட்ட மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தற்பொழுது, முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்து இரண்டாண்டு கட்டாயப் பணியை முடித்தவர்களுக்கு, பணி நிரந்தரமும் வழங்கப்படுவதில்லை. காலி இடங்கள் இல்லாததால் எல்லோருக்கும் இரண்டாண்டு கட்டாயப் பணியும் வழங்கப்படவில்லை.

இதனால், முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். சான்றிதழ்கள் கிடைக்காததன் காரணமாக தனியார் துறைகளிலும் வேலை பெற முடியாத நிலையில் உள்ளனர். இப்பிரச்னை புதிய நெருக்கடிகளை சிக்கல்களை உருவாக்கியுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்தவர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதாக உள்ளது. எனவே, இந்த இரண்டாண்டு கட்டாய வேலை என்பதை ஓராண்டாக குறைக்க வேண்டும்.

வேறு மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் பட்டமேற்படிப்பு இடங்களில் சேர்வதை தடுக்கும் வகையில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் தமிழ்நாடு மாணவர்கள் ஒதுக்கீடு பெற‌ வழிவகை செய்ய வேண்டும்.

கட்டாய தற்காலிகப் பணி, முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பின் பொழுதே 3 மாதங்கள் மாவட்ட மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற திட்டங்கள், இளம் மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் செயலாகும். எனவே, அவற்றை ரத்து செய்ய வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும், ஆர்.சி.எச் தூய்மைப் பணியாளர்கள், நீண்ட காலமாக ரூ. 1500 மட்டுமே தொகுப்பூதியமாக பெற்றுக் கொண்டு, தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்தனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில் தமிழ்நாடு அரசு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.15,000 ஊதியம் கிடைத்திடும் வகையில், பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களாக பணிவழங்கி உதவியுள்ளது. இது வரவேற்புக்குரியது. இதற்காக தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவிக்கும் மாநாட்டை சென்னையில் நடத்த உள்ளோம்.

சில இடங்களில் ஆர்.சி.எச் தூய்மைப் பணியாளர்களுக்கு பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களாக பணி வழங்குவதில் சில இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளது. அவற்றைச் சரி செய்திட வேண்டும்.

மருத்துவக் கழிவுகளை அகற்றும் தனியார் நிறுவனங்கள் கடும் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளன. முறையாக கழிவுகளையும் அகற்றுவதில்லை. இதைச் சரி செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கழிவுகளை அகற்றிட வேண்டும்.

இந்தியாவில் எச்.ஐ.வி தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எச்.ஐ.வி பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டியுள்ள நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 5081 மையங்களில் 2119 எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூட சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

அதன் அடிப்படையில், தமிழகத்தில் மட்டும் 186 மையங்கள் மூடப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்படும். 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் 2500 ஊழியர்களின் வேலை பறிபோகும். எனவே, இத்தகு முயற்சிகளை கைவிட வேண்டும்.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிர்வாகம் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இடிந்து விழும் நிலையில் நூலகக் கட்டடம்: பெஞ்ச், கழிப்பிட வசதி கூட இல்லை - வாசகர்கள் வேதனை!

சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "எம்பிபிஎஸ் படிப்பிற்கு நெக்ஸ்ட் தேர்வை திணிப்பதுபோல் பல் மருத்துவப் படிப்பிற்கும் மத்திய அரசு நெக்ஸ்ட் தேர்வை திணிப்பது கடும் கண்டனத்திற்குரியது. மருத்துவப் படிப்புகளில் மாநில உரிமைகளைப் பறிப்பது சரியல்ல. எனவே, நெக்ஸ்ட் தேர்வை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும். பிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக, தலைமை கணக்காயர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தமிழ்நாடு அரசு முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும் அரசு சாரா தனியார் மருத்துவர்கள், படிப்பை முடித்ததும் இரண்டு ஆண்டுகள் காலம் கட்டாயமாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. இரண்டாண்டு கால தற்காலிகப் பணிக்குப் பிறகு, அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. இதனால் அவர்களும் பொதுமக்களும் பயனடைந்தார்கள். மேலும், வேறு மாநில மருத்துவர்கள் அகில இந்திய ஒதுக்கீடு மூலம் அதிக இடங்களை எடுப்பதையும் தடுக்க முடிந்தது.

ஆனால் தற்பொழுது, மருத்துவர்கள் மத்தியில் வேலையின்மை அதிகரித்துள்ளது. காலிப்பணியிடங்களும் அதிகம் இல்லை. புதியப் பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. முதுநிலை மருத்துவ இடங்களும் அதிகரித்துள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பின் போதே, மூன்று மாத காலம் மாவட்ட மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தற்பொழுது, முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்து இரண்டாண்டு கட்டாயப் பணியை முடித்தவர்களுக்கு, பணி நிரந்தரமும் வழங்கப்படுவதில்லை. காலி இடங்கள் இல்லாததால் எல்லோருக்கும் இரண்டாண்டு கட்டாயப் பணியும் வழங்கப்படவில்லை.

இதனால், முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். சான்றிதழ்கள் கிடைக்காததன் காரணமாக தனியார் துறைகளிலும் வேலை பெற முடியாத நிலையில் உள்ளனர். இப்பிரச்னை புதிய நெருக்கடிகளை சிக்கல்களை உருவாக்கியுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்தவர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதாக உள்ளது. எனவே, இந்த இரண்டாண்டு கட்டாய வேலை என்பதை ஓராண்டாக குறைக்க வேண்டும்.

வேறு மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் பட்டமேற்படிப்பு இடங்களில் சேர்வதை தடுக்கும் வகையில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் தமிழ்நாடு மாணவர்கள் ஒதுக்கீடு பெற‌ வழிவகை செய்ய வேண்டும்.

கட்டாய தற்காலிகப் பணி, முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பின் பொழுதே 3 மாதங்கள் மாவட்ட மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற திட்டங்கள், இளம் மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் செயலாகும். எனவே, அவற்றை ரத்து செய்ய வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும், ஆர்.சி.எச் தூய்மைப் பணியாளர்கள், நீண்ட காலமாக ரூ. 1500 மட்டுமே தொகுப்பூதியமாக பெற்றுக் கொண்டு, தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்தனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில் தமிழ்நாடு அரசு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.15,000 ஊதியம் கிடைத்திடும் வகையில், பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களாக பணிவழங்கி உதவியுள்ளது. இது வரவேற்புக்குரியது. இதற்காக தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவிக்கும் மாநாட்டை சென்னையில் நடத்த உள்ளோம்.

சில இடங்களில் ஆர்.சி.எச் தூய்மைப் பணியாளர்களுக்கு பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களாக பணி வழங்குவதில் சில இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளது. அவற்றைச் சரி செய்திட வேண்டும்.

மருத்துவக் கழிவுகளை அகற்றும் தனியார் நிறுவனங்கள் கடும் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளன. முறையாக கழிவுகளையும் அகற்றுவதில்லை. இதைச் சரி செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கழிவுகளை அகற்றிட வேண்டும்.

இந்தியாவில் எச்.ஐ.வி தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எச்.ஐ.வி பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டியுள்ள நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 5081 மையங்களில் 2119 எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூட சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

அதன் அடிப்படையில், தமிழகத்தில் மட்டும் 186 மையங்கள் மூடப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்படும். 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் 2500 ஊழியர்களின் வேலை பறிபோகும். எனவே, இத்தகு முயற்சிகளை கைவிட வேண்டும்.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிர்வாகம் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இடிந்து விழும் நிலையில் நூலகக் கட்டடம்: பெஞ்ச், கழிப்பிட வசதி கூட இல்லை - வாசகர்கள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.