அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் "கழக அமைப்புச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதியின் தந்தை கே. கோபால் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.
தந்தையை இழந்து வாடும் சகோதரி வளர்மதி மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பார்த்திருக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அகல்விளக்கை ஏற்றுவதற்கு அறிவியல் பூர்வமான காரணம் உண்டா பிரதமரே! - எம்.பி சுப்பராயன்