ETV Bharat / state

நாளை முதல் சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு - சென்னை மாநகராட்சி

சென்னை: கடந்த 28 நாட்களில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளை, கட்டுப்பாட்டில் இருந்து நீக்குவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

author img

By

Published : May 1, 2020, 9:13 PM IST

chennai
chennai

தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், சென்னையில் அதன் பரவல் மிகத் தீவிரமடைந்து வருகிறது. இந்த நோய்த் தொற்று பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் கரோனா வைரஸ் அதிகம் பாதித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு மாநகராட்சி சார்பில், சீல் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட பட்டியல்
சென்னை மாநகராட்சி வெளியிட்ட பட்டியல்

தற்போது அந்தப் பகுதிகளை 28 நாட்களுக்குப் பிறகு, எந்த ஒரு புதிய கரோனா தொற்று பாதிப்பும் ஏற்படாததால் சீல் வைக்கப்பட்ட பகுதிகளை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து நீக்குவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:-

மதுர வாசல் தெரு, டேவிட்சன் தெரு, வரதராஜன்பேட்டை (சூளைமேடு), வேணுகோபால் தெரு (சைதாப்பேட்டை), எல்லையம்மன் கோயில் தெரு (கோட்டூர்புரம்), நேரு தெரு கல் குட்டை (பெருங்குடி), எம்ஜிஆர் நகர் (பனையூர்) ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பழங்குடியினரின் பசியைப் போக்கும் மாவோயிஸ்ட் எம்.எல்.ஏ.

தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், சென்னையில் அதன் பரவல் மிகத் தீவிரமடைந்து வருகிறது. இந்த நோய்த் தொற்று பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் கரோனா வைரஸ் அதிகம் பாதித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு மாநகராட்சி சார்பில், சீல் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட பட்டியல்
சென்னை மாநகராட்சி வெளியிட்ட பட்டியல்

தற்போது அந்தப் பகுதிகளை 28 நாட்களுக்குப் பிறகு, எந்த ஒரு புதிய கரோனா தொற்று பாதிப்பும் ஏற்படாததால் சீல் வைக்கப்பட்ட பகுதிகளை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து நீக்குவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:-

மதுர வாசல் தெரு, டேவிட்சன் தெரு, வரதராஜன்பேட்டை (சூளைமேடு), வேணுகோபால் தெரு (சைதாப்பேட்டை), எல்லையம்மன் கோயில் தெரு (கோட்டூர்புரம்), நேரு தெரு கல் குட்டை (பெருங்குடி), எம்ஜிஆர் நகர் (பனையூர்) ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பழங்குடியினரின் பசியைப் போக்கும் மாவோயிஸ்ட் எம்.எல்.ஏ.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.