மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததற்காக பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், கடந்த மே மாதம் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜூன் 8ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அவரை ஐந்து நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி காவல் துறை தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முகமது பரூக், ராஜகோபாலனை மூன்று நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து கடந்த 1ஆம் தேதி உத்தரவிட்டது.
மூன்று நாள்கள் போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து, ராஜகோபாலன், சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (ஜூன்.04) ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து அவரை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஜாமீன் கோரி ராஜகோபாலன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு, நாளை (ஜூன்.05) விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க: ஓராண்டாக வேலையில்லை, நிலைமை படுமோசம்- டெல்லி திரும்பிய குடிபெயர் தொழிலாளி வேதனை!