சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் மேலும் 523 பேர் இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று(ஜனவரி 26) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 55 ஆயிரத்து 617 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 523 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 54லட்சத்து 46ஆயிரத்து 642 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் 8லட்சத்து 35ஆயிரத்து 803 நபர்கள் கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4ஆயிரத்து 736 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணம் அடைந்த மேலும் 595 நபர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 18ஆயிரத்து 742ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 3 நோயாளிகள் அரசு மருத்துவமனையில் இரண்டு நோயாளிகள் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 325ஐ எட்டியுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
- சென்னை- 2,30,522
- கோயம்புத்தூர்- 54,125
- செங்கல்பட்டு - 51336
- திருவள்ளூர் - 43,444
- சேலம் - 32,333
- காஞ்சிபுரம் - 29,190
- கடலூர் - 24,897
- மதுரை - 20,941
- வேலூர் - 20,674
- திருவண்ணாமலை - 19,337
- தேனி - 17,060
- தஞ்சாவூர் - 17,633
- திருப்பூர் - 17,781
- விருதுநகர் - 16,544
- கன்னியாகுமரி -16,773
- தூத்துக்குடி - 16,258
- ராணிப்பேட்டை -16,097
- திருநெல்வேலி - 15,535
- விழுப்புரம் - 15,165
- திருச்சிராப்பள்ளி -14,613
- ஈரோடு - 14,266
- புதுக்கோட்டை -11,536
- கள்ளக்குறிச்சி - 10,866
- திருவாரூர் - 11,164
- நாமக்கல் -11,570
- திண்டுக்கல் - 11,206
- தென்காசி - 8,402
- நாகப்பட்டினம் - 8,414
- நீலகிரி - 8172
- கிருஷ்ணகிரி - 8,048
- திருப்பத்தூர் - 7,561
- சிவகங்கை - 6,647
- ராமநாதபுரம் - 6,407
- தருமபுரி - 6,569
- கரூர் - 5,377
- அரியலூர் - 4,677
- பெரம்பலூர் - 2,261
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்- 940
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்- 1,034
- ரயில் மூலம் வந்தவர்கள்- 428