ETV Bharat / state

உக்ரைனில் இருந்து 852 மாணவர்கள் மீட்பு : தமிழ்நாடு அரசின் சிறப்புக் குழுவால் சென்னை வரவழைப்பு

author img

By

Published : Mar 6, 2022, 10:49 PM IST

உக்ரைனில் இருந்து டெல்லி வந்தடைந்த மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட குழுவினரால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உக்ரைனில் இருந்து 852 மாணவர்கள் மீட்பு : தமிழ்நாடு அரசின் சிறப்பு குழுவால் சென்னை வரவழைக்கப்பட்டனர்
உக்ரைனில் இருந்து 852 மாணவர்கள் மீட்பு : தமிழ்நாடு அரசின் சிறப்பு குழுவால் சென்னை வரவழைக்கப்பட்டனர்

சென்னை: உக்ரைனிலிருந்து டெல்லி வந்தடைந்த 1011 மாணவர்களில் 852 மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட, உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்பதற்கான மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஐஏஎஸ் அலுவலர்கள் அடங்கிய குழுவினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் நேற்று(பிப்.5) டெல்லி சென்றனர்.

மீட்புப் பணிக்கான ஆலோசனை

மேலும், பிப்.5-அன்று காலை 11 மணிக்கு ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டு மக்களைத் தாயகம் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து, குழுவினர் , நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் டெல்லியில் தங்கியிருந்து மாணவர்களின் மீட்புப்பணியை கண்காணிக்கும் பொருட்டு இன்று (6.3.2022) தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இக்கூட்டத்தில் உக்ரைனில் இருந்து வருகை தரும் மாணவர்களை உடனுக்குடன் தமிழ்நாட்டிற்குத் தேவைக்கேற்ப தனி விமானம் ஏற்பாடு செய்து அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி வரும் மாணவர்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு, தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

852 மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைப்பு

இதுவரை உக்ரைனிலிருந்து டெல்லி வந்தடைந்த 1011 மாணவர்களில் 852 மாணவர்கள் (தனி விமானத்தில் 180 மாணவர்கள் உட்பட) தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர தற்போது 159 மாணவர்களுக்கு விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களை சிறப்புக் குழுவினர் நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தனர். தமிழ்நாடு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க:போரை நிறுத்துங்கள்: மணக்கோலத்தில் வலியுறுத்திய மணமக்கள்

சென்னை: உக்ரைனிலிருந்து டெல்லி வந்தடைந்த 1011 மாணவர்களில் 852 மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட, உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்பதற்கான மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஐஏஎஸ் அலுவலர்கள் அடங்கிய குழுவினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் நேற்று(பிப்.5) டெல்லி சென்றனர்.

மீட்புப் பணிக்கான ஆலோசனை

மேலும், பிப்.5-அன்று காலை 11 மணிக்கு ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டு மக்களைத் தாயகம் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து, குழுவினர் , நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் டெல்லியில் தங்கியிருந்து மாணவர்களின் மீட்புப்பணியை கண்காணிக்கும் பொருட்டு இன்று (6.3.2022) தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இக்கூட்டத்தில் உக்ரைனில் இருந்து வருகை தரும் மாணவர்களை உடனுக்குடன் தமிழ்நாட்டிற்குத் தேவைக்கேற்ப தனி விமானம் ஏற்பாடு செய்து அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி வரும் மாணவர்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு, தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

852 மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைப்பு

இதுவரை உக்ரைனிலிருந்து டெல்லி வந்தடைந்த 1011 மாணவர்களில் 852 மாணவர்கள் (தனி விமானத்தில் 180 மாணவர்கள் உட்பட) தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர தற்போது 159 மாணவர்களுக்கு விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களை சிறப்புக் குழுவினர் நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தனர். தமிழ்நாடு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க:போரை நிறுத்துங்கள்: மணக்கோலத்தில் வலியுறுத்திய மணமக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.