ETV Bharat / state

டால்பின்களை பாதுகாக்க டால்பின் திட்டம் - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 11:00 PM IST

Updated : Nov 8, 2023, 7:52 AM IST

Project Dolphin: டால்பின் இனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கும், அவற்றின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்கும், அதே நேரத்தில் அழிவு நிலையில் காணப்படும் உயிரினங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும் அரசு சார்பில் "டால்பின் திட்டம்" செயல்படுத்தப்பட உள்ளது.

டால்பில்களை பாதுகாக்க டால்பின் திட்டம்
டால்பில்களை பாதுகாக்க டால்பின் திட்டம்

சென்னை: கடல் சூழலியல் மற்றும் கடல் சூழலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வலுப்படுத்த "டால்பின் திட்டம்" 8.13 கோடி ரூபாய் செலவில் அரசு சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் அலையாத்தி காடுகள், பவளப்பாறைகள், கடல் புல் போன்ற கடலோர சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பதன் மூலம், டால்பின் வாழ்விடத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடல்வாழ் உயிரினங்களில் 9-க்கும் மேற்பட்ட டால்பின் வகைகள் காணப்படுகின்றன. மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் இவற்றின் முக்கிய வாழ்விடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில், 7 டால்பின்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டு கடலில் மீள விடப்பட்டன. மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் என்பது கடல் பாலூட்டிகளான கடல் பசு போன்றவை உட்பட, வளமான கடல் பல்லுயிர் பெருக்கத்துடன் அதிக உற்பத்தித்திறன் கொண்ட பகுதியாகும்.

தற்போது டால்பின்கள் வேட்டையாடப்படுதல், மீன்பிடி வலைகளில் சிக்குதல், மிதமிஞ்சிய மீன்பிடித்தல், காலநிலை மாற்றம், கப்பல் வேலைநிறுத்தங்கள், சுற்றுலா நடவடிக்கைகள், நச்சு மாசுபாடு, ஒலி மாசுபாடு, எண்ணெய் மற்றும் எரிவாயு வளர்ச்சி, வாழ்விடச் சீரழிவு போன்ற பல்வேறு இயற்கை மற்றும் மனிதனால் தூண்டப்பட்ட அச்சுறுத்தல்களை உலகெங்கிலும் உள்ள டால்பின்கள் எதிர்கொள்கின்றன.

இந்நிலையில், மீனவர்கள் மற்றும் கடல் சார்ந்த பிற மக்களுடன் இணைந்து நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டால்பின்கள் மற்றும் அவற்றின் நீர்வாழ்விடங்களைப் பாதுகாப்பதே இந்த டால்பின் திட்டத்தின் முக்கிய நோக்கம் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தெரிவித்திருப்பதாவது, "டால்பின் இனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கும், அவற்றின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்கும், அதே நேரத்தில் உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த டால்பின் திட்டம் உதவியாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் அழிவு நிலையில் காணப்படும் உயிரினங்களை பாதுகாப்பதில் உள்ள சவால்களை கையாள பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

டால்பின்களை காக்க திட்டங்கள்: சிறந்த ரோந்து வேட்டை தடுப்பு நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு மற்றும் ரோந்து குழுக்களை வலுப்படுத்துதல். கால்நடை மருத்துவ சேவைகளை வலுப்படுத்துதல், ரோந்து மற்றும் பயிற்சி போன்றவற்றின் மூலம் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள்.

அலையாத்தி காடுகள், பவளப்பாறைகள், கடல் புல் போன்ற கடலோர சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பதன் மூலம் டால்பின் வாழ்விடத்தை மேம்படுத்துதல். சுருக்குமடி வலைகளை அகற்றுதல் மற்றும் கடலோரப் பகுதிகளில் மாசுபாட்டைக் குறைத்தல். உள்ளூர் மக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 'டால்பின் உதவித்தொகை' தொடங்குதல். "தேசிய டால்பின் தினத்தை" கொண்டாடுவதன் மூலம் விழிப்புணர்வை மேம்படுத்துதல். ஊக்கத்தொகை மற்றும் விருதுகள் மூலம் உள்ளூர் சமூகத்தை ஊக்குவித்தல்.

டால்பின் உதவித்தொகை திட்டத்தை தொடங்குதல் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் பற்றிய புரிதலை மேம்படுத்துதல். சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் வழக்கமான மீன்பிடி நடைமுறைகளுக்கு மாற்றாக வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குதல். கலந்தாய்வுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் மூலம் மேற்படி அழிந்து வரும் உயிரினங்களை புரிந்து கொள்ள ஏற்பாடு செய்தல்” என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை திட்டங்களை வகுத்து உள்ளது.

இதையும் படிங்க: வீட்டில் லீசுக்கு இருந்தவரை வெளியேற்றி பூட்டு போட்ட நடிகர் நாகேந்திர பிரசாத் - பூட்டை உடைத்த போலீஸ்!

சென்னை: கடல் சூழலியல் மற்றும் கடல் சூழலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வலுப்படுத்த "டால்பின் திட்டம்" 8.13 கோடி ரூபாய் செலவில் அரசு சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் அலையாத்தி காடுகள், பவளப்பாறைகள், கடல் புல் போன்ற கடலோர சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பதன் மூலம், டால்பின் வாழ்விடத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடல்வாழ் உயிரினங்களில் 9-க்கும் மேற்பட்ட டால்பின் வகைகள் காணப்படுகின்றன. மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் இவற்றின் முக்கிய வாழ்விடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில், 7 டால்பின்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டு கடலில் மீள விடப்பட்டன. மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் என்பது கடல் பாலூட்டிகளான கடல் பசு போன்றவை உட்பட, வளமான கடல் பல்லுயிர் பெருக்கத்துடன் அதிக உற்பத்தித்திறன் கொண்ட பகுதியாகும்.

தற்போது டால்பின்கள் வேட்டையாடப்படுதல், மீன்பிடி வலைகளில் சிக்குதல், மிதமிஞ்சிய மீன்பிடித்தல், காலநிலை மாற்றம், கப்பல் வேலைநிறுத்தங்கள், சுற்றுலா நடவடிக்கைகள், நச்சு மாசுபாடு, ஒலி மாசுபாடு, எண்ணெய் மற்றும் எரிவாயு வளர்ச்சி, வாழ்விடச் சீரழிவு போன்ற பல்வேறு இயற்கை மற்றும் மனிதனால் தூண்டப்பட்ட அச்சுறுத்தல்களை உலகெங்கிலும் உள்ள டால்பின்கள் எதிர்கொள்கின்றன.

இந்நிலையில், மீனவர்கள் மற்றும் கடல் சார்ந்த பிற மக்களுடன் இணைந்து நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டால்பின்கள் மற்றும் அவற்றின் நீர்வாழ்விடங்களைப் பாதுகாப்பதே இந்த டால்பின் திட்டத்தின் முக்கிய நோக்கம் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தெரிவித்திருப்பதாவது, "டால்பின் இனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கும், அவற்றின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்கும், அதே நேரத்தில் உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த டால்பின் திட்டம் உதவியாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் அழிவு நிலையில் காணப்படும் உயிரினங்களை பாதுகாப்பதில் உள்ள சவால்களை கையாள பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

டால்பின்களை காக்க திட்டங்கள்: சிறந்த ரோந்து வேட்டை தடுப்பு நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு மற்றும் ரோந்து குழுக்களை வலுப்படுத்துதல். கால்நடை மருத்துவ சேவைகளை வலுப்படுத்துதல், ரோந்து மற்றும் பயிற்சி போன்றவற்றின் மூலம் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள்.

அலையாத்தி காடுகள், பவளப்பாறைகள், கடல் புல் போன்ற கடலோர சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பதன் மூலம் டால்பின் வாழ்விடத்தை மேம்படுத்துதல். சுருக்குமடி வலைகளை அகற்றுதல் மற்றும் கடலோரப் பகுதிகளில் மாசுபாட்டைக் குறைத்தல். உள்ளூர் மக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 'டால்பின் உதவித்தொகை' தொடங்குதல். "தேசிய டால்பின் தினத்தை" கொண்டாடுவதன் மூலம் விழிப்புணர்வை மேம்படுத்துதல். ஊக்கத்தொகை மற்றும் விருதுகள் மூலம் உள்ளூர் சமூகத்தை ஊக்குவித்தல்.

டால்பின் உதவித்தொகை திட்டத்தை தொடங்குதல் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் பற்றிய புரிதலை மேம்படுத்துதல். சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் வழக்கமான மீன்பிடி நடைமுறைகளுக்கு மாற்றாக வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குதல். கலந்தாய்வுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் மூலம் மேற்படி அழிந்து வரும் உயிரினங்களை புரிந்து கொள்ள ஏற்பாடு செய்தல்” என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை திட்டங்களை வகுத்து உள்ளது.

இதையும் படிங்க: வீட்டில் லீசுக்கு இருந்தவரை வெளியேற்றி பூட்டு போட்ட நடிகர் நாகேந்திர பிரசாத் - பூட்டை உடைத்த போலீஸ்!

Last Updated : Nov 8, 2023, 7:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.