ETV Bharat / state

மகாராஷ்டிரா ஆளுநர் அவசரம் காட்டியது ஏன்? - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி

author img

By

Published : Nov 26, 2019, 4:42 AM IST

சென்னை: குடியரசுத் தலைவர் ஆட்சி அதிகாலை திரும்பப் பெறப்படுவதற்கான காரணம் என்ன? ஆளுநர் அவசரம் காட்டியது ஏன்? என அடுகடுக்கான கேள்விகளை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். ஆழகிரி எழுப்பியுள்ளார்.

TNCC

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷ்ணுபிரசாத், ஜெயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி, மேலிட பார்வையாளர் கே.வி.தாமஸ், காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவெல்ல பிரசாத் உள்ளிட்ட பலர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, "மோடி அரசு இந்தியாவை எப்படி சீரழித்துள்ளார்கள், மராட்டியத்தில் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்களிடத்தில் எடுத்துச் சொன்னோம். அதிகாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்படுகிறது. எட்டு மணிக்கு முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்றுக் கொள்கிறார். அவ்வளவு அவசரம் என்ன என்பதுதான் எங்களது கேள்வி.

காங்கிரஸ் சார்பில் போராட்டம்

எதற்காக ஆளுநர் அவ்வளவு அவசரம் காட்டினார். இதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன. ஆளுநர் என்பவர் வானளாவிய அதிகாரம் படைத்தவர் அல்ல. மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடியவரே. ஜனநாயகம் எப்படி கொலை செய்யப்படுகிறது என இந்திய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

உள்ளாட்சி என்பதே மக்களின் பங்களிப்புதான். மக்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கிறது என்றால் அந்தத் தேர்தலால் மக்களுக்கு எந்த நன்மையும் நிகழாது. மக்கள் சக்தியை ஒன்று திரட்டி எடப்பாடி அரசின் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்" என்றார்.

இதையும் படிங்க: 'காங்., என்.சி.பி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எங்களுக்குதான்': ஆட்சியமைக்க உரிமை கோரிய சிவசேனா!

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷ்ணுபிரசாத், ஜெயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி, மேலிட பார்வையாளர் கே.வி.தாமஸ், காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவெல்ல பிரசாத் உள்ளிட்ட பலர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, "மோடி அரசு இந்தியாவை எப்படி சீரழித்துள்ளார்கள், மராட்டியத்தில் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்களிடத்தில் எடுத்துச் சொன்னோம். அதிகாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்படுகிறது. எட்டு மணிக்கு முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்றுக் கொள்கிறார். அவ்வளவு அவசரம் என்ன என்பதுதான் எங்களது கேள்வி.

காங்கிரஸ் சார்பில் போராட்டம்

எதற்காக ஆளுநர் அவ்வளவு அவசரம் காட்டினார். இதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன. ஆளுநர் என்பவர் வானளாவிய அதிகாரம் படைத்தவர் அல்ல. மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடியவரே. ஜனநாயகம் எப்படி கொலை செய்யப்படுகிறது என இந்திய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

உள்ளாட்சி என்பதே மக்களின் பங்களிப்புதான். மக்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கிறது என்றால் அந்தத் தேர்தலால் மக்களுக்கு எந்த நன்மையும் நிகழாது. மக்கள் சக்தியை ஒன்று திரட்டி எடப்பாடி அரசின் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்" என்றார்.

இதையும் படிங்க: 'காங்., என்.சி.பி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எங்களுக்குதான்': ஆட்சியமைக்க உரிமை கோரிய சிவசேனா!

Intro:Body:பாஜக அரசின் பொருளாதார சீர்கேட்டை கண்டித்தும், மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷ்ணுபிரசாத், ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மேலிட பார்வையாளர் கே.வி.தாமஸ், காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவெல்ல பிரசாத் மற்றும் காங்கிரஸ் கட்சி முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தனர். பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதாகவும், மன்மோகன் ஆட்சியில் பொருளாதாரம் சிறந்த வகையில் நிர்வாகிக்கபட்டதாகவும் பலரும் கருத்து தெரிவித்தனர். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கை மற்றும் கார்ப்பரேட் களுக்கான வரித் தள்ளுபடி நடவடிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக சாடினார். போராட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "மோடி அரசு இந்தியாவை எப்படி சீரழித்திருக்கிறார்கள், மராட்டியத்தில் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் மக்களிடத்தில் எடுத்துச் சொன்னோம். அதிகாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்படுகிறது எட்டு மணிக்கு முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த ஒருவர் பதவியேற்றுக் கொள்கிறார். அவ்வளவு அவசரம் என்ன என்பதுதான் எங்களது கேள்வி. பத்து மணிக்குள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன. எதற்காக ஆளுநர் அவ்வளவு அவசரம் காட்டினார் இதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன. ஆளுநர் என்பவர் வானளாவிய அதிகாரம் படைத்தவர் அல்ல மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடியவரே. ஜனநாயகம் எப்படி கொலை செய்யப்படுகிறது என இந்திய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உள்ளாட்சி என்பதே மக்களின் பங்களிப்பு தான் மக்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கிறது என்றால் அந்த தேர்தலால் கிராமப்புறங்களில் நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு நன்மை இல்லை. மக்கள் சக்தி ஒன்று திரட்டி எடப்பாடி அரசின் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்" என்றார்.Conclusion:Visual in mojo

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.