ETV Bharat / state

18 எம்பிபிஎஸ், 137 பிடிஎஸ் படிப்பில் சேர விரும்பும் கல்லூரியை பதிவு செய்யலாம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 4:45 PM IST

Updated : Nov 7, 2023, 5:15 PM IST

tamil nadu medical counselling: தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள 136 இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு நவ.9ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பல் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடமும், அரசு ஒதுக்கீட்டில் 10 தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் 14 இடங்களிலும், தனியார் பல்கலைக் கழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் 4 இடங்களிலும், 11 தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் காலியாக உள்ள 136 இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு நவ.9ந் தேதி வரையில் பதிவு செய்யலாம் எனத் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பிற்கான் இறுதிக்கட்ட கலந்தாய்வு
மருத்துவப் படிப்பிற்கான் இறுதிக்கட்ட கலந்தாய்வு

2023-24 ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு, சுயநிதி, மற்றும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 105 கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 14 ஆயிரத்து 600 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசின் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் 8 ஆயிரத்து 316 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 2 ஆயிரத்து 32 இடங்கள், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் நிரப்பப்பட அனுமதிக்கப்பட்டது.

எம்பிபிஎஸ் படிப்பிற்கான 4 சுற்றுக்கலந்தாய்வு முடிந்தப் பின்னர், அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் காலியாக இல்லை. நிர்வாக ஒதுக்கீட்டில் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 14 இடங்களும், தனியார் பல்கலைக்கழகங்களில் 4 இடங்களும் என மொத்தம் 18 இடங்கள் காலியாக உள்ளது.

இந்த நிலையில் தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு , எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான 4 சுற்றுக்கலந்தாய்வு முடிந்து, அவர்கள் சேர்வதற்கான காலக்கெடு, அக்டோபர் 3ந் தேதி என மத்திய மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எனவே அவர்கள் அனுமதி தரும் வரையில் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க முடியாது என அறிவித்து இருந்தது.

மருத்துவப் படிப்பிற்கான் இறுதிக்கட்ட கலந்தாய்வு
மருத்துவப் படிப்பிற்கான் இறுதிக்கட்ட கலந்தாய்வு

இதனையடுத்து, அக்டோபர் 13ந் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு, தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவப்படிப்பில் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்க வேண்டும் என கடிதம் எழுதினார். மேலும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் எம்பிபிஎஸ் படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்பிக் கொள்வதற்கு அனுமதி வழங்கியது. இது குறித்து மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழுவின் செயலாளர் அருணலதா கூறியதாவது, "மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அரசு சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டாவியாவிற்கு எழுதிய நேர்முக கடித்ததின் அடிப்படையில், 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி நிரப்பப்படும்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் 18 மருத்துவ இடங்களும் காலியாக உள்ளன. தமிழ்நாடு அரசுப் பல்மருத்துவக்கல்லூரியில் ஒரு (1) இடமும், 11 தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் 136 இடங்களும் காலியாக உள்ளது. மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வில் 7 முதல் 9-ந் தேதி வரையில் விரும்பும் கல்லூரிகளை மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இது இறுதிக்கட்ட கலந்தாய்வு என்பதால் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் நன்றாக யோசித்து தங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் மருத்துவமோ அல்லது பல் மருத்துவமோ இடம் கிடைத்து கல்லூரியில் சேரவில்லை என்றால் ஒரு மருத்துவ இடம் வீணாவதுடன், அடுத்துவருக்கு கிடைக்கும் வாய்ப்பும் கிடைக்காமல் போய்விடும். ஆகவே மாணவர்கள் கவனமுடன் தீர ஆலோசனை செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம்.. கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் தகுதி - குவியும் பாராட்டுகள்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பல் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடமும், அரசு ஒதுக்கீட்டில் 10 தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் 14 இடங்களிலும், தனியார் பல்கலைக் கழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் 4 இடங்களிலும், 11 தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் காலியாக உள்ள 136 இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு நவ.9ந் தேதி வரையில் பதிவு செய்யலாம் எனத் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பிற்கான் இறுதிக்கட்ட கலந்தாய்வு
மருத்துவப் படிப்பிற்கான் இறுதிக்கட்ட கலந்தாய்வு

2023-24 ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு, சுயநிதி, மற்றும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 105 கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 14 ஆயிரத்து 600 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசின் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் 8 ஆயிரத்து 316 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 2 ஆயிரத்து 32 இடங்கள், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் நிரப்பப்பட அனுமதிக்கப்பட்டது.

எம்பிபிஎஸ் படிப்பிற்கான 4 சுற்றுக்கலந்தாய்வு முடிந்தப் பின்னர், அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் காலியாக இல்லை. நிர்வாக ஒதுக்கீட்டில் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 14 இடங்களும், தனியார் பல்கலைக்கழகங்களில் 4 இடங்களும் என மொத்தம் 18 இடங்கள் காலியாக உள்ளது.

இந்த நிலையில் தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு , எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான 4 சுற்றுக்கலந்தாய்வு முடிந்து, அவர்கள் சேர்வதற்கான காலக்கெடு, அக்டோபர் 3ந் தேதி என மத்திய மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எனவே அவர்கள் அனுமதி தரும் வரையில் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க முடியாது என அறிவித்து இருந்தது.

மருத்துவப் படிப்பிற்கான் இறுதிக்கட்ட கலந்தாய்வு
மருத்துவப் படிப்பிற்கான் இறுதிக்கட்ட கலந்தாய்வு

இதனையடுத்து, அக்டோபர் 13ந் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு, தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவப்படிப்பில் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்க வேண்டும் என கடிதம் எழுதினார். மேலும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் எம்பிபிஎஸ் படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்பிக் கொள்வதற்கு அனுமதி வழங்கியது. இது குறித்து மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழுவின் செயலாளர் அருணலதா கூறியதாவது, "மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அரசு சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டாவியாவிற்கு எழுதிய நேர்முக கடித்ததின் அடிப்படையில், 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி நிரப்பப்படும்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் 18 மருத்துவ இடங்களும் காலியாக உள்ளன. தமிழ்நாடு அரசுப் பல்மருத்துவக்கல்லூரியில் ஒரு (1) இடமும், 11 தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் 136 இடங்களும் காலியாக உள்ளது. மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வில் 7 முதல் 9-ந் தேதி வரையில் விரும்பும் கல்லூரிகளை மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இது இறுதிக்கட்ட கலந்தாய்வு என்பதால் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் நன்றாக யோசித்து தங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் மருத்துவமோ அல்லது பல் மருத்துவமோ இடம் கிடைத்து கல்லூரியில் சேரவில்லை என்றால் ஒரு மருத்துவ இடம் வீணாவதுடன், அடுத்துவருக்கு கிடைக்கும் வாய்ப்பும் கிடைக்காமல் போய்விடும். ஆகவே மாணவர்கள் கவனமுடன் தீர ஆலோசனை செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம்.. கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் தகுதி - குவியும் பாராட்டுகள்!

Last Updated : Nov 7, 2023, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.