ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்காக "மணற்கேணி" செயலி அறிமுகம் - சிறப்பம்சம் என்ன?

author img

By

Published : Jul 26, 2023, 8:23 AM IST

நாட்டிலேயே முதல் முறையாக மாணவர்களுக்காக 'மணற்கேணி' என்ற பெயரில் புதிய செயலியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

Manarkeni
மணற்கேணி
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தாம்பரம் பெருநகராட்சி பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாட்டிலேயே முதன் முறையாக ‘மணற்கேணி’ என்ற செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதனை மாணவர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் UNCCD துணைப் பொதுச் செயலாளர் அல்லது நிர்வாகச் செயலாளர் இப்ராஹிம் தயாவ் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மணற்கேணி செயலி ஆசிரியர்கள் கற்பித்தலுக்காக பயன்படுத்தும் துணைக் கருவிகளில் ஒன்றாகும். பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கு மட்டுமே காணொலிப் பாடங்கள் கிட்டும் என்ற நிலையை போக்கி, அவற்றை அனைவருக்குமானதாக மாற்றுவதே இச்செயலியின் நோக்கம்.

மணற்கேணி செயலியில் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாநில பாடத் திட்டத்தில் உள்ள பாடங்களை 27,000 பாடப்பொருளாக வகுப்புகள் தாண்டி வகை பிரித்து, அதற்கேற்றபடி காணொலி வாயிலாக விளக்கங்களை உருவாக்கி கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு காணொலி முடிவிலும் கேள்விகள் கேட்கப்பட்டு கற்போரின் புரிதல் திறனை சரிபார்க்கும் வசதியும் உள்ளது.

நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "முதலமைச்சரின் எண்ணம் எல்லோருக்கும் எல்லாமும் போய் சேர வேண்டும் என்ற வகையில்தான் இது போன்ற பல முன்னெடுப்புகள் எடுத்து வருகிறோம். 'தொட்டனை தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனை தூறும் அறிவு'. அனைவருக்கும் புரிவதற்காகத்தான் இந்த செயலி.

மாணவச் செல்வங்கள் எளிதில் கல்வியை கற்க எடுக்கப்படும், முன்னெடுப்பு. வகுப்பறையில் படிப்பதை காட்டிலும் செயலியில் வீட்டில் இருந்தபடியே படித்து கொள்ள புரியும். வகுப்பில் சந்தேகம் கேட்கும்போது மற்றவர்கள் சிரித்து விடுவார்களோ, இது கூட தெரியாமல் என யோசிக்காமல் இந்த செயலில் சென்று பார்த்து கொள்ளலாம்.

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள கூடிய தன்னம்பிக்கையை வழங்கக்கூடிய செயலி இது. தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. நல்ல சமுதாயத்தை இந்த உலகிற்கு வழங்கக்கூடிய துறையாக எங்கள் துறை இருப்பதாக தெரிவித்தார்.

இறுதியாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை சார்பில் புதிய முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அதில் முத்தாய்ப்பான திட்டமாக மணற்கேணி என்ற செயலியை அறிமுகபடுத்தி இருக்கிறோம். இந்த செயலியை பொறுத்தவரை, இன்றைக்கு 12ஆம் வகுப்பு படிக்கிற மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் பாடம் எளிதாக புரிய வேண்டும்.

வெறும் மனப்பாடம் செய்து தேர்வெழுதுவதைக் காட்டிலும் புரிதல் தன்மையோடு அறிவைக் கொண்டு சேர்க்க வேண்டும். யார் வேண்டுமானாலும் இந்த செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். செயலியில் பாடம் நடத்தும் ஆசிரியர் மட்டுமில்லாமல் 2டி, 3டி அனிமேஷனில் அதை விளக்கும் விதமாக வீடியோக்கள் அமைந்திருக்கிறது.

இந்த செயலியை உருவாக்க இரண்டு வருடம் எடுத்திருக்கிறோம். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பார்த்தோமென்றால் தனியார் சிலரிடம் சேர்ந்து பணத்தை பெற்றும் வீடியோ வழங்குவார்கள். இந்த செயலியில் சொல்லி கொடுக்கும்போதே 15 வகையான கேள்விகளும் கேட்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லி அவசர சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தகவல்!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தாம்பரம் பெருநகராட்சி பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாட்டிலேயே முதன் முறையாக ‘மணற்கேணி’ என்ற செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதனை மாணவர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் UNCCD துணைப் பொதுச் செயலாளர் அல்லது நிர்வாகச் செயலாளர் இப்ராஹிம் தயாவ் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மணற்கேணி செயலி ஆசிரியர்கள் கற்பித்தலுக்காக பயன்படுத்தும் துணைக் கருவிகளில் ஒன்றாகும். பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கு மட்டுமே காணொலிப் பாடங்கள் கிட்டும் என்ற நிலையை போக்கி, அவற்றை அனைவருக்குமானதாக மாற்றுவதே இச்செயலியின் நோக்கம்.

மணற்கேணி செயலியில் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாநில பாடத் திட்டத்தில் உள்ள பாடங்களை 27,000 பாடப்பொருளாக வகுப்புகள் தாண்டி வகை பிரித்து, அதற்கேற்றபடி காணொலி வாயிலாக விளக்கங்களை உருவாக்கி கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு காணொலி முடிவிலும் கேள்விகள் கேட்கப்பட்டு கற்போரின் புரிதல் திறனை சரிபார்க்கும் வசதியும் உள்ளது.

நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "முதலமைச்சரின் எண்ணம் எல்லோருக்கும் எல்லாமும் போய் சேர வேண்டும் என்ற வகையில்தான் இது போன்ற பல முன்னெடுப்புகள் எடுத்து வருகிறோம். 'தொட்டனை தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனை தூறும் அறிவு'. அனைவருக்கும் புரிவதற்காகத்தான் இந்த செயலி.

மாணவச் செல்வங்கள் எளிதில் கல்வியை கற்க எடுக்கப்படும், முன்னெடுப்பு. வகுப்பறையில் படிப்பதை காட்டிலும் செயலியில் வீட்டில் இருந்தபடியே படித்து கொள்ள புரியும். வகுப்பில் சந்தேகம் கேட்கும்போது மற்றவர்கள் சிரித்து விடுவார்களோ, இது கூட தெரியாமல் என யோசிக்காமல் இந்த செயலில் சென்று பார்த்து கொள்ளலாம்.

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள கூடிய தன்னம்பிக்கையை வழங்கக்கூடிய செயலி இது. தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. நல்ல சமுதாயத்தை இந்த உலகிற்கு வழங்கக்கூடிய துறையாக எங்கள் துறை இருப்பதாக தெரிவித்தார்.

இறுதியாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை சார்பில் புதிய முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அதில் முத்தாய்ப்பான திட்டமாக மணற்கேணி என்ற செயலியை அறிமுகபடுத்தி இருக்கிறோம். இந்த செயலியை பொறுத்தவரை, இன்றைக்கு 12ஆம் வகுப்பு படிக்கிற மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் பாடம் எளிதாக புரிய வேண்டும்.

வெறும் மனப்பாடம் செய்து தேர்வெழுதுவதைக் காட்டிலும் புரிதல் தன்மையோடு அறிவைக் கொண்டு சேர்க்க வேண்டும். யார் வேண்டுமானாலும் இந்த செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். செயலியில் பாடம் நடத்தும் ஆசிரியர் மட்டுமில்லாமல் 2டி, 3டி அனிமேஷனில் அதை விளக்கும் விதமாக வீடியோக்கள் அமைந்திருக்கிறது.

இந்த செயலியை உருவாக்க இரண்டு வருடம் எடுத்திருக்கிறோம். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பார்த்தோமென்றால் தனியார் சிலரிடம் சேர்ந்து பணத்தை பெற்றும் வீடியோ வழங்குவார்கள். இந்த செயலியில் சொல்லி கொடுக்கும்போதே 15 வகையான கேள்விகளும் கேட்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லி அவசர சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.