ETV Bharat / state

'புதிய கல்விக் கொள்கையில் தெளிவாக இருக்கிறோம்' - செங்கோட்டையன் - minister sengottaiyan

சென்னை: புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தெளிவாக இருக்கிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

K. A. Sengottaiyan
author img

By

Published : Jul 22, 2019, 12:25 PM IST

சென்னை ராயபுரத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் 15 பள்ளிகளைச் சேர்ந்த மூன்றாயிரத்து 491 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாட்டில் இதுவரை 54 லட்சத்து 36 ஆயிரம் மடிக்கணினிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவே வியக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் குறைவான ஆடிட்டர்கள் மட்டுமே உள்ளதாகக் கூறிய அவர், அதனால், சி.ஏ. படிப்பை தமிழ்நாடு மாணவர்களிடையே கொண்டுச் செல்லும் வகையில் 11, 12ஆம் வகுப்பு முடிப்பவர்களுக்கு பயிற்சி வழங்கி தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தார்.

'புதிய கல்விக் கொள்கையில் தெளிவாக இருக்கிறோம்' - செங்கோட்டையன்

புதிய கல்விக் கொள்கை குறித்து தாங்கள் தெளிவாக இருப்பதாகச் சொன்ன செங்கோட்டையன், அதேபோன்று இருமொழிக் கல்வி கொள்கையில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்றார். இது குறித்து இந்திய பிரதமருக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய செங்கோட்டையன், நீட் தேர்வு பயிற்சியில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு மாணவர்கள் அதிகளவில் தகுதி பெற்றுள்ளதாகக் கூறினார்.

சென்னை ராயபுரத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் 15 பள்ளிகளைச் சேர்ந்த மூன்றாயிரத்து 491 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாட்டில் இதுவரை 54 லட்சத்து 36 ஆயிரம் மடிக்கணினிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவே வியக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் குறைவான ஆடிட்டர்கள் மட்டுமே உள்ளதாகக் கூறிய அவர், அதனால், சி.ஏ. படிப்பை தமிழ்நாடு மாணவர்களிடையே கொண்டுச் செல்லும் வகையில் 11, 12ஆம் வகுப்பு முடிப்பவர்களுக்கு பயிற்சி வழங்கி தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தார்.

'புதிய கல்விக் கொள்கையில் தெளிவாக இருக்கிறோம்' - செங்கோட்டையன்

புதிய கல்விக் கொள்கை குறித்து தாங்கள் தெளிவாக இருப்பதாகச் சொன்ன செங்கோட்டையன், அதேபோன்று இருமொழிக் கல்வி கொள்கையில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்றார். இது குறித்து இந்திய பிரதமருக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய செங்கோட்டையன், நீட் தேர்வு பயிற்சியில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு மாணவர்கள் அதிகளவில் தகுதி பெற்றுள்ளதாகக் கூறினார்.

Intro:பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது


Body:சென்னை ராயபுரத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார்

ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 15 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 491 பேருக்கு மடிக்கணினி வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் வழங்கக்கூடிய மடிக்கணினியின் எண்ணிக்கை இதுவரை 54 லட்சத்து 36 ஆயிரம் மடிக்கணினி நாம் வழங்கியுள்ளோம்

புதிய பாடத்திட்டம் இந்தியாவே வியக்கத்தக்க வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் குறைவான ஆடிட்டர்கள் மட்டுமே உள்ளனர் ஆகையால் சி ஏ முடித்துக் கொண்டு தமிழக மாணவர்கள் தேர்வாக வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் பதினொன்று பன்னிரண்டாம் வகுப்பு முடித்த உடனே அவர்களுக்கு பயிற்சி வழங்கி தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது

புதிய கல்விக் கொள்கை குறித்து நாங்கள் தெளிவாக இருக்கிறோம் இருமொழிக் கல்வி கொள்கை தான் என்று இது குறித்து தான் தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார் எனவே இரு மொழி கல்வி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது

நீட் தேர்வு பயிற்சி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் படிப்படியாக பயிற்சி பெற்று வரும் போது இந்த ஆண்டு 2 மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது ஒருவர் கூட இடம் கிடைக்கவில்லை என்று சொல்ல முடியாது நான் அந்த இரண்டு மாணவர்களின் பெயர் பட்டியலை கூட கூறுகிறேன்என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்


Conclusion:பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.