ETV Bharat / state

வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு: தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் விளக்கம்! - வசந்தகுமார் குறித்து சத்ய பிரத சாகு

சென்னை: வசந்தகுமார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.

Sathya Pradha Sahu
author img

By

Published : Oct 21, 2019, 11:13 PM IST

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்ய பிரத சாகு தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "நாங்குநேரியில் 66.10 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. விக்கிரவாண்டியில் 84.36 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. இரு தொகுதிகளிலும் இன்று காலை முதல் பெரும்பாலும் வி.வி.பேட் பிரச்னைகள் ஏதும் இல்லை. இரண்டு இடங்களில் மழை பெய்தது. ஆனால் அதனால் எந்த பிரச்னையும் இல்லை.

2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விக்கிரவாண்டியில் 81.25 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அன்றைய வாக்குப்பதிவைக் காட்டிலும் இது 3 சதவிகிதம் அதிகம். 2016ஆம் ஆண்டு நாங்குநேரியில் 71.92 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. ஒட்டு மொத்த வாக்குப்பதிவு சதவிகிதம் நாளை காலை தெரிய வரும்" என்றார்.

வசந்தகுமார் குறித்துப் பேசிய அவர், "தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர் வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில், 143, 171 h, 130 (மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்) ஆகிய மூன்று பிரிவின் கீழ் வசந்த குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்ய பிரத சாகு தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "நாங்குநேரியில் 66.10 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. விக்கிரவாண்டியில் 84.36 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. இரு தொகுதிகளிலும் இன்று காலை முதல் பெரும்பாலும் வி.வி.பேட் பிரச்னைகள் ஏதும் இல்லை. இரண்டு இடங்களில் மழை பெய்தது. ஆனால் அதனால் எந்த பிரச்னையும் இல்லை.

2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விக்கிரவாண்டியில் 81.25 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அன்றைய வாக்குப்பதிவைக் காட்டிலும் இது 3 சதவிகிதம் அதிகம். 2016ஆம் ஆண்டு நாங்குநேரியில் 71.92 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. ஒட்டு மொத்த வாக்குப்பதிவு சதவிகிதம் நாளை காலை தெரிய வரும்" என்றார்.

வசந்தகுமார் குறித்துப் பேசிய அவர், "தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர் வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில், 143, 171 h, 130 (மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்) ஆகிய மூன்று பிரிவின் கீழ் வசந்த குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

Intro:Body:விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

நாங்குநேரியில் 66.10% வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், விக்கிரவாண்டியில் 84.36% பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்தார். இரு தொகுதிகளிலும் இன்று காலை முதல் பெரும்பாலும் வி.வி.பேட் பிரச்சினைகள் ஏதும் இல்லை. இரண்டு இடங்களில் மழை இருந்தது. ஆனால் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. தொகுதியில் சம்பந்தம் இல்லாத நபர் சென்றதாக வந்த குற்றச்சாட்டு அடிப்படையில், 143 sec( IPC) 171 h( IPC) RP Act - 130 (மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்) ஆகிய மூன்று பிரிவின் கீழ் வசந்த குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

2016 ஆண்டு நடந்த தேர்தலில் விக்கிரவாண்டியில் பதிவான வாக்குகள் - 81.25% இன்று - 84.36% இது 3 சதவீதம் அதிகம். 2016ல் நாங்குநேரியில் - 71.92 சதவீதம், இன்று - 66.10 சதவீதம் பதிவாகியுள்ளது, ஒட்டு மொத்த வாக்குப்பதிவு நாளை காலை தெரிய வரும், என்றார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.