ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 366 பேருக்குக் கரோனா

author img

By

Published : Feb 28, 2022, 8:44 PM IST

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 366 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

tamil nadu covid updat  covid updat  corona cases in tamil nadu  tamilnadu corona cases  கரோனா பாதிப்புகள்  தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புகள்  கரோனா நிலவரம்  தமிழ்நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை  காரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை
கரோனா

சென்னை: தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 55 ஆயிரத்து 656 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் தமிழ்நாட்டில் இருந்த 366 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் கரோனாவினால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 49ஆயிரத்து 373ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 5 ஆயிரத்து 745 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 13 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 5 ஆயிரத்து 624 என உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 4 என உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் ஆறு மாவட்டங்களில் ஒருவருக்குக்கூட நோய் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அனைத்து மாவட்டங்களிலும் 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 96 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 54 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 40 நபர்களுக்கும், ஈரோட்டில் 12 நபர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 13 நபர்களுக்கும், கன்னியாகுமரி 11 நபர்களுக்கும், நீலகிரியில் 18 நபர்களுக்கும், சேலத்தில் 12 நபர்களுக்கும், திருவள்ளூரில் 15 நபர்களுக்கும், திருப்பூரில் 14 நபர்களுக்கும், திருச்சியில் 10 நபர்களுக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 55 ஆயிரத்து 656 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் தமிழ்நாட்டில் இருந்த 366 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் கரோனாவினால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 49ஆயிரத்து 373ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 5 ஆயிரத்து 745 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 13 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 5 ஆயிரத்து 624 என உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 4 என உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் ஆறு மாவட்டங்களில் ஒருவருக்குக்கூட நோய் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அனைத்து மாவட்டங்களிலும் 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 96 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 54 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 40 நபர்களுக்கும், ஈரோட்டில் 12 நபர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 13 நபர்களுக்கும், கன்னியாகுமரி 11 நபர்களுக்கும், நீலகிரியில் 18 நபர்களுக்கும், சேலத்தில் 12 நபர்களுக்கும், திருவள்ளூரில் 15 நபர்களுக்கும், திருப்பூரில் 14 நபர்களுக்கும், திருச்சியில் 10 நபர்களுக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.