ETV Bharat / state

தமிழ்நாட்டில் 8 லட்சத்தை கடந்தது கரோனா பாதிப்பு

author img

By

Published : Dec 14, 2020, 9:07 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது.

தமிழ்நாடு கரோனா எண்ணிக்கை
தமிழ்நாடு கரோனா எண்ணிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (டிசம்பர் 14) புதிதாக ஆயிரத்து 141 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 29ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை வெளியிட்டுள்ள கரோனா குறித்த புள்ளி விவர தகவலில்படி, தமிழ்நாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 27 லட்சத்து 23 ஆயிரத்து 672 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 10 ஆயிரத்து 39 கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் புதிதாக ஆயிரத்து 203 நோயாளிகள் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 78 ஆயிரத்து 81ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில், சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 8 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 6 நோயாளிகளும் என மொத்தம் 18 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 909ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த கரோனா பாதிப்பு (14.12.2020)

மாவட்டம்கரோனா எண்ணிக்கை
சென்னை 2,20,211
கோயம்புத்தூர் 50558
செங்கல்பட்டு48,788
திருவள்ளூர் 41823
சேலம்30831
காஞ்சிபுரம்28183
கடலூர்24,445
மதுரை20142
வேலூர்19830
திருவண்ணாமலை 18919
தேனி16736
தஞ்சாவூர்16746
விருதுநகர் 16133
கன்னியாகுமரி 16029
தூத்துக்குடி 15883
ராணிப்பேட்டை15771
திருப்பூர் 16253
திருநெல்வேலி 15055
விழுப்புரம்14796
திருச்சிராப்பள்ளி13762
ஈரோடு 13088
புதுக்கோட்டை11279
கள்ளக்குறிச்சி10733
திருவாரூர் 10695
நாமக்கல் 10814
திண்டுக்கல்10625
தென்காசி8171
நாகப்பட்டினம்7882
நீலகிரி 7682
கிருஷ்ணகிரி7654
சிவகங்கை6422
ராமநாதபுரம்6263
தருமபுரி6251
கரூர்4995
அரியலூர்4611
பெரம்பலூர் 2249
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்928
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்1015
ரயில் மூலம் வந்தவர்கள்428

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக் கழகத்தில் 700 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை?

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (டிசம்பர் 14) புதிதாக ஆயிரத்து 141 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 29ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை வெளியிட்டுள்ள கரோனா குறித்த புள்ளி விவர தகவலில்படி, தமிழ்நாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 27 லட்சத்து 23 ஆயிரத்து 672 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 10 ஆயிரத்து 39 கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் புதிதாக ஆயிரத்து 203 நோயாளிகள் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 78 ஆயிரத்து 81ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில், சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 8 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 6 நோயாளிகளும் என மொத்தம் 18 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 909ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த கரோனா பாதிப்பு (14.12.2020)

மாவட்டம்கரோனா எண்ணிக்கை
சென்னை 2,20,211
கோயம்புத்தூர் 50558
செங்கல்பட்டு48,788
திருவள்ளூர் 41823
சேலம்30831
காஞ்சிபுரம்28183
கடலூர்24,445
மதுரை20142
வேலூர்19830
திருவண்ணாமலை 18919
தேனி16736
தஞ்சாவூர்16746
விருதுநகர் 16133
கன்னியாகுமரி 16029
தூத்துக்குடி 15883
ராணிப்பேட்டை15771
திருப்பூர் 16253
திருநெல்வேலி 15055
விழுப்புரம்14796
திருச்சிராப்பள்ளி13762
ஈரோடு 13088
புதுக்கோட்டை11279
கள்ளக்குறிச்சி10733
திருவாரூர் 10695
நாமக்கல் 10814
திண்டுக்கல்10625
தென்காசி8171
நாகப்பட்டினம்7882
நீலகிரி 7682
கிருஷ்ணகிரி7654
சிவகங்கை6422
ராமநாதபுரம்6263
தருமபுரி6251
கரூர்4995
அரியலூர்4611
பெரம்பலூர் 2249
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்928
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்1015
ரயில் மூலம் வந்தவர்கள்428

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக் கழகத்தில் 700 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.