ETV Bharat / state

'கரும்பு ஆலையிலிருந்து விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத் தருக!' - Association leader Ayakannu

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமிருந்து பாக்கித் தொகை பெற்று தரக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வேளாண்மை உற்பத்தி ஆணையர், கரும்புத் துறை ஆணையர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.

அய்யாகண்ணு பேட்டி
author img

By

Published : Jun 11, 2019, 7:14 PM IST

ரூ.656 கோடி பாக்கி வைத்துள்ள கரும்பு விவசாயிகளுக்கு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமிருந்து அந்தத் தொகையை பெற்று தரக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தி ஆணையர், கரும்புத் துறை ஆணையர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தார்.

இதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'கடலூர் மாவட்டத்தில் இயங்கும் ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கடந்த 30 மாதங்களுக்கு முன்பு கடலூர், தஞ்சையில் உள்ள கரும்பு விவசாயிகள் சுமார் 14 லட்சம் டன் கரும்புகளை அரவைக்காக கொடுத்துள்ளனர். அப்படி கொடுக்கப்பட்ட கரும்புக்கு அந்த நிறுவனம் இதுவரை ரூ. 556 கோடி பாக்கி வைத்துள்ளது.

அய்யாக்கண்ணு பேட்டி

இதில் கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 236 கோடியும், தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 420 கோடியும் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நிலுவைத் தொகையை வழங்காமல், தன்னிடம் சொத்தும் ஏதும் இல்லையென்று வங்கி மூலம் தெரிவித்துள்ளார்.

சொத்துகள் அனைத்தையும் அமெரிக்காவில் வைத்துக்கொண்டு விவசாயிகளை ஏமாற்றிவருகிறார். ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் இருந்து நிலுவைத் தொகையை வாங்கிக் கொடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம்' என்றார்.

ரூ.656 கோடி பாக்கி வைத்துள்ள கரும்பு விவசாயிகளுக்கு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமிருந்து அந்தத் தொகையை பெற்று தரக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தி ஆணையர், கரும்புத் துறை ஆணையர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தார்.

இதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'கடலூர் மாவட்டத்தில் இயங்கும் ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கடந்த 30 மாதங்களுக்கு முன்பு கடலூர், தஞ்சையில் உள்ள கரும்பு விவசாயிகள் சுமார் 14 லட்சம் டன் கரும்புகளை அரவைக்காக கொடுத்துள்ளனர். அப்படி கொடுக்கப்பட்ட கரும்புக்கு அந்த நிறுவனம் இதுவரை ரூ. 556 கோடி பாக்கி வைத்துள்ளது.

அய்யாக்கண்ணு பேட்டி

இதில் கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 236 கோடியும், தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 420 கோடியும் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நிலுவைத் தொகையை வழங்காமல், தன்னிடம் சொத்தும் ஏதும் இல்லையென்று வங்கி மூலம் தெரிவித்துள்ளார்.

சொத்துகள் அனைத்தையும் அமெரிக்காவில் வைத்துக்கொண்டு விவசாயிகளை ஏமாற்றிவருகிறார். ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் இருந்து நிலுவைத் தொகையை வாங்கிக் கொடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம்' என்றார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை தலைமை செயலகத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் கரும்பு துறை ஆணையர் ஆகியோரை சந்தித்து மனு அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கடந்த 30 மாதங்களுக்கு முன்பு 14 லட்சம் டன் கரும்புகளை விவசாயிகள் கொடுத்துள்ளனர். இதில் கடலூர் மாவட்டத்துக்கு 236 கோடி, தஞ்சை மாவட்டத்துக்கு  420 கோடி நிலுவை தொகை உள்ளது. மேலும் நேற்று தன்னிடம் சொத்து ஏதும் இல்லை வாங்கி மூலம் தெரிவித்துள்ளார். ஆனால் அனைத்து  சொத்துக்களையும் அமெரிக்காவில் பதுக்கி வைத்துள்ளார். இதற்காக நாங்கள் இன்று வேளாண்மை துறை அமைச்சரையும் செயலாளரையும் சந்தித்து மனு அளித்துள்ளோம். தற்கொலை செய்வதை தவிர வேறு வழி இல்லை. 25 நாளுக்கு காத்திருப்பு போராட்டம் நடத்த கேட்டு அனுமதி கேட்டுள்ளோம். அந்த ஆலையின் ராம் தியாகராஜனை கைது செய்ய வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். என்றார். 

--
V.T. VIJAY,
Reporter/ Content Editor,
E TV bharat,
chennai.
+91 9629185442

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.