ETV Bharat / state

மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை? - சிவசங்கர் பாபா பதிலளிக்க உத்தரவு

மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக் கோரிய சிபிசிஐடி வழக்கு குறித்து சிவசங்கர் பாபா பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Nov 3, 2022, 3:23 PM IST

சிவசங்கர் பாபா பதிலளிக்க உத்தரவு
சிவசங்கர் பாபா பதிலளிக்க உத்தரவு

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவனின் தாய்க்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த 2010 ஆம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக 2021 இல் அளிக்கப்பட்ட புகாரில் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்க கோரி எந்த மனுவையும் சிபிசிஐடி தாக்கல் செய்யாத நிலையில், வழக்கை நடத்த முடியாது என கூறி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

வழக்கு ரத்து செய்யப்பட்ட உத்தரவை திரும்பபெறக் கோரி சிபிசிஐடி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது காவல்துறை சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை கருத்தில் கொள்ளாமல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், வழக்கை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறினார்.

இதனையடுத்து, மனு குறித்து சிவசங்கர் பாபா பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: ஆய்வுப்பணியின்போது விழ இருந்த அமைச்சரை தாங்கி பிடித்த நிர்வாகிகள்

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவனின் தாய்க்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த 2010 ஆம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக 2021 இல் அளிக்கப்பட்ட புகாரில் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்க கோரி எந்த மனுவையும் சிபிசிஐடி தாக்கல் செய்யாத நிலையில், வழக்கை நடத்த முடியாது என கூறி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

வழக்கு ரத்து செய்யப்பட்ட உத்தரவை திரும்பபெறக் கோரி சிபிசிஐடி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது காவல்துறை சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை கருத்தில் கொள்ளாமல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், வழக்கை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறினார்.

இதனையடுத்து, மனு குறித்து சிவசங்கர் பாபா பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: ஆய்வுப்பணியின்போது விழ இருந்த அமைச்சரை தாங்கி பிடித்த நிர்வாகிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.