ETV Bharat / state

’11ஆம் வகுப்புக்கு பழைய பாடத்திட்டமே தொடர ஆணை வெளியிட வேண்டும்'

author img

By

Published : Jul 4, 2020, 4:14 PM IST

11ஆம் வகுப்பு பழைய பாடத்திட்டமே தொடரும் வகையில் ஆணை பிறப்பிக்க வேண்டும் என இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மாணவர்கள்
மாணவர்கள்

தமிழ்நாட்டில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம் காணொலி வழியே நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ச. மயில் தலைமையேற்றார். இதில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை பின்வருமாறு:

தீர்மானம் எண் : 1

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைத்து பணியாளர்களுக்கும், சொந்த ஊர்களுக்குச் செல்லும் போது உயிரிழந்த இடம்பெயர் தொழிலாளர்கள், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான க.மீனாட்சிசுந்தரம் ஆகியோரின் மறைவிற்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தீர்மானம் எண் : 2

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (விடுபட்ட பாடங்கள்) ரத்து செய்தல் குறித்து வெளியிடப்பட்ட அரசாணையை விமர்சித்து தொலைக்காட்சி, பத்திரிகைகளில் கருத்து வெளியிட்டதாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இணைப்புச் சங்கங்களான தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவரும், தஞ்சாவூர் மாவட்டம் மனையேறிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியருமான மா.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் திண்டுக்கல் மாவட்டம், நல்லமனார்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியருமாகிய பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீது பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதி 17 ( ஆ ) ன் கீழான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என இம்மாநிலக்குழு பள்ளிக்கல்வித்துறையை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

பள்ளிக் கல்வித்துறையின் மீது அக்கறை கொண்டு, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசாணை எண் : 54இன் மீது மேற்படி சங்கத்தலைவர்கள், தங்கள் சங்கத்தின் கருத்துக்களை தெரிவித்ததை பள்ளிக்கல்வித்துறை விமர்சனமாக எடுத்துக் கொள்ளாமல் ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொண்டு கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னை தொடர்பாக ஜூலை 20ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலக்குழு கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தீர்மானித்திடவும் முடிவு எடுக்கப்பட்டது.

தீர்மானம் எண் : 3

கரோனா பேரிடர் ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதும் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2020-21ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம், மாணவர்களின் கற்றல், கற்பித்தல் தொடர்பாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இணைப்புச் சங்கங்கள் தனித்தனியாக அறிக்கையொன்றை மாநிலக்குழுவிற்கு அளித்திட தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் எண் : 4

கரோனா பேரிடர் மீட்புப் பணிகளில் அனைவரும் இணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றுவது தற்போதைய தேவை என்றாலும், சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் சுகாதாரப்பணிகளில் அனுபவமில்லாத, 50 வயதிற்கு மேற்பட்ட, உடல்நலம் குன்றிய ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தி அப்பணிகளில் அலுவலர்கள் ஈடுபட வைப்பதைத் அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டும். நோய்த்தொற்றுத் தடுப்புப் பணிகளில் ஆர்வமுள்ள, உடல் தகுதி கொண்ட, 50 வயதிற்குட்பட்ட ஆசிரியர்களை அவர்களது விருப்பத்தின் பேரில் மட்டும் பயன்படுத்த வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

தீர்மானம் எண் : 5

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதே ஆண்டு ஜனவரி 30 வரை நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான குற்றவியல் நடவடிக்கைககளை அரசு நல்லெண்ண அடிப்படையில் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான 17 ( ஆ ) நடவடிக்கைகள் தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கைவிடப்பட்டு இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் மீதான 17 (ஆ) நடவடிக்கைகள் தமிழ்நாடு முழுவதும் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளதை அரசின் கவனத்திற்கு இம்மாநிலக்குழு கொண்டுவருகிறது.

தீர்மானம் எண் : 6

கரோனா நெருக்கடியால் பள்ளிக்கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைச் சீர்செய்ய தகுந்த ஆலோசனைகள் வழங்குவதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அரசுப்பள்ளி ஆசிரியர்களையும், கல்வியாளர்களையும், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளையும் இணைத்திட வேண்டும்.

தீர்மானம் எண் : 7

பதினொன்றாம் வகுப்பில் தற்போது நடைமுறையில் உள்ள 6 பாடங்கள் 600 மதிப்பெண்கள் என்பதை 5 பாடங்கள் 500 மதிப்பெண்கள் என தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது. இந்த அறிவிப்பை மாணவர்களின் நலன், தமிழ்நாட்டின் எதிர்கால கல்வி வளர்ச்சி கருதி அரசு உடனடியாகத் திரும்பப் பெறுவதோடு, பழைய நடைமுறையே தொடரும் வகையில் ஆணை வெளியிட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: அனைத்து வழக்குகளும் காணொலி மூலம் விசாரிப்பு: சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாட்டில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம் காணொலி வழியே நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ச. மயில் தலைமையேற்றார். இதில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை பின்வருமாறு:

தீர்மானம் எண் : 1

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைத்து பணியாளர்களுக்கும், சொந்த ஊர்களுக்குச் செல்லும் போது உயிரிழந்த இடம்பெயர் தொழிலாளர்கள், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான க.மீனாட்சிசுந்தரம் ஆகியோரின் மறைவிற்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தீர்மானம் எண் : 2

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (விடுபட்ட பாடங்கள்) ரத்து செய்தல் குறித்து வெளியிடப்பட்ட அரசாணையை விமர்சித்து தொலைக்காட்சி, பத்திரிகைகளில் கருத்து வெளியிட்டதாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இணைப்புச் சங்கங்களான தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவரும், தஞ்சாவூர் மாவட்டம் மனையேறிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியருமான மா.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் திண்டுக்கல் மாவட்டம், நல்லமனார்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியருமாகிய பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீது பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதி 17 ( ஆ ) ன் கீழான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என இம்மாநிலக்குழு பள்ளிக்கல்வித்துறையை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

பள்ளிக் கல்வித்துறையின் மீது அக்கறை கொண்டு, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசாணை எண் : 54இன் மீது மேற்படி சங்கத்தலைவர்கள், தங்கள் சங்கத்தின் கருத்துக்களை தெரிவித்ததை பள்ளிக்கல்வித்துறை விமர்சனமாக எடுத்துக் கொள்ளாமல் ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொண்டு கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னை தொடர்பாக ஜூலை 20ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலக்குழு கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தீர்மானித்திடவும் முடிவு எடுக்கப்பட்டது.

தீர்மானம் எண் : 3

கரோனா பேரிடர் ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதும் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2020-21ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம், மாணவர்களின் கற்றல், கற்பித்தல் தொடர்பாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இணைப்புச் சங்கங்கள் தனித்தனியாக அறிக்கையொன்றை மாநிலக்குழுவிற்கு அளித்திட தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் எண் : 4

கரோனா பேரிடர் மீட்புப் பணிகளில் அனைவரும் இணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றுவது தற்போதைய தேவை என்றாலும், சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் சுகாதாரப்பணிகளில் அனுபவமில்லாத, 50 வயதிற்கு மேற்பட்ட, உடல்நலம் குன்றிய ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தி அப்பணிகளில் அலுவலர்கள் ஈடுபட வைப்பதைத் அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டும். நோய்த்தொற்றுத் தடுப்புப் பணிகளில் ஆர்வமுள்ள, உடல் தகுதி கொண்ட, 50 வயதிற்குட்பட்ட ஆசிரியர்களை அவர்களது விருப்பத்தின் பேரில் மட்டும் பயன்படுத்த வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

தீர்மானம் எண் : 5

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதே ஆண்டு ஜனவரி 30 வரை நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான குற்றவியல் நடவடிக்கைககளை அரசு நல்லெண்ண அடிப்படையில் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான 17 ( ஆ ) நடவடிக்கைகள் தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கைவிடப்பட்டு இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் மீதான 17 (ஆ) நடவடிக்கைகள் தமிழ்நாடு முழுவதும் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளதை அரசின் கவனத்திற்கு இம்மாநிலக்குழு கொண்டுவருகிறது.

தீர்மானம் எண் : 6

கரோனா நெருக்கடியால் பள்ளிக்கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைச் சீர்செய்ய தகுந்த ஆலோசனைகள் வழங்குவதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அரசுப்பள்ளி ஆசிரியர்களையும், கல்வியாளர்களையும், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளையும் இணைத்திட வேண்டும்.

தீர்மானம் எண் : 7

பதினொன்றாம் வகுப்பில் தற்போது நடைமுறையில் உள்ள 6 பாடங்கள் 600 மதிப்பெண்கள் என்பதை 5 பாடங்கள் 500 மதிப்பெண்கள் என தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது. இந்த அறிவிப்பை மாணவர்களின் நலன், தமிழ்நாட்டின் எதிர்கால கல்வி வளர்ச்சி கருதி அரசு உடனடியாகத் திரும்பப் பெறுவதோடு, பழைய நடைமுறையே தொடரும் வகையில் ஆணை வெளியிட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: அனைத்து வழக்குகளும் காணொலி மூலம் விசாரிப்பு: சென்னை உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.