ETV Bharat / state

மனித உரிமை ஆணையத்தின் ஆணை புறக்கணிப்பு? - சென்னை உயர்நீதிமன்றம் வார்னிங்!

author img

By

Published : Nov 12, 2022, 4:33 PM IST

தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்க மாநில அரசு மறுப்பதை, ஏற்றுக் கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: வழக்கறிஞர் சாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2008ஆம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதலை, தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தேன்.

புகாரை விசாரித்த ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டது. மேலும் காவல் துறையை மீறி புகார் அளித்ததால், தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்து போலீசார் கடுமையாக தாக்கியதாக வழக்கறிஞர் சாமி மனுவில் கூறியுள்ளார்.

மேலும், சம்பந்தபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மீண்டும் ஆணையத்தை அணுகிய போது, புகார் தொடர்புடைய ஐ.பி.எஸ். அதிகாரி அருண் உள்ளிட்டோர் மீது தலைமைச் செயலர் நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டதாகவும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன், கே.குமரேஷ்பாபு அமர்பு, தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தது.

மேலும் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்பது அல்லது மேல்முறையீடு செய்வது மட்டுமே சரியாகும் என தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் புகார் குறித்து தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கான அறிக்கையை 15ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 'டிராபிக் போஸீஸ் லஞ்சம் வாங்கினால் குற்ற நடவடிக்கை' சென்னை காவல்துறை வார்னிங்!

சென்னை: வழக்கறிஞர் சாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2008ஆம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதலை, தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தேன்.

புகாரை விசாரித்த ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டது. மேலும் காவல் துறையை மீறி புகார் அளித்ததால், தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்து போலீசார் கடுமையாக தாக்கியதாக வழக்கறிஞர் சாமி மனுவில் கூறியுள்ளார்.

மேலும், சம்பந்தபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மீண்டும் ஆணையத்தை அணுகிய போது, புகார் தொடர்புடைய ஐ.பி.எஸ். அதிகாரி அருண் உள்ளிட்டோர் மீது தலைமைச் செயலர் நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டதாகவும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன், கே.குமரேஷ்பாபு அமர்பு, தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தது.

மேலும் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்பது அல்லது மேல்முறையீடு செய்வது மட்டுமே சரியாகும் என தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் புகார் குறித்து தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கான அறிக்கையை 15ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 'டிராபிக் போஸீஸ் லஞ்சம் வாங்கினால் குற்ற நடவடிக்கை' சென்னை காவல்துறை வார்னிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.