ETV Bharat / state

14 மாத சிறை தண்டனை - நாடு திரும்பிய இலங்கை மீனவர்கள்!

author img

By

Published : Oct 25, 2019, 9:49 AM IST

சென்னை: இந்திய எல்லையில் மீன் பிடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இலங்கைச் சேர்ந்த இரு மீனவர்கள் 14 மாதங்களுக்குப் பிறகு நாடு திரும்பினர்.

Chennai

இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் சக்திவேல், ராஜ்குமார் ஆகிய இருவரும் எல்லை தாண்டி இந்திய கடல் பகுதிக்குள் மீன் பிடித்த குற்றத்திற்காக 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான மீனவர்களின் பதினான்கு மாத தண்டனைக் காலம் முடிந்தும், உரிய ஆவணங்கள் இல்லாததால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

தகவல் அறிந்த சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையச் செயலாளர் ஜெயந்தி, இலங்கை துணை தூதரகத்தின் உதவியுடன் ஆவணங்கள் தயார் செய்து இரண்டு பேரையும் இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.

அதன்படி இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்த மீனவர்கள் இருவரும் செய்தியாளர்களிடம், "எங்கள்மீது தொடுக்கப்பட்ட வழக்கு பொய்யானது, வழக்கின் உண்மையை எடுத்துக் கூறியபின் எங்களை அக்டோபர் 18ஆம் தேதி விடுதலை செய்தனர். நாங்கள் நாடு திரும்புவதற்கு உரிய ஆவணங்களை தயார் செய்து கொடுத்த சட்டப்பணி ஆணையச் செயலாளர் ஜெயந்தி அவர்களுக்கு நன்றி" என்றனர்.

நாடு திரும்பிய இலங்கை மீனவர்கள்

இதையடுத்து அவர்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: புதுகை மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படையினர் அத்துமீறல்

இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் சக்திவேல், ராஜ்குமார் ஆகிய இருவரும் எல்லை தாண்டி இந்திய கடல் பகுதிக்குள் மீன் பிடித்த குற்றத்திற்காக 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான மீனவர்களின் பதினான்கு மாத தண்டனைக் காலம் முடிந்தும், உரிய ஆவணங்கள் இல்லாததால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

தகவல் அறிந்த சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையச் செயலாளர் ஜெயந்தி, இலங்கை துணை தூதரகத்தின் உதவியுடன் ஆவணங்கள் தயார் செய்து இரண்டு பேரையும் இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.

அதன்படி இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்த மீனவர்கள் இருவரும் செய்தியாளர்களிடம், "எங்கள்மீது தொடுக்கப்பட்ட வழக்கு பொய்யானது, வழக்கின் உண்மையை எடுத்துக் கூறியபின் எங்களை அக்டோபர் 18ஆம் தேதி விடுதலை செய்தனர். நாங்கள் நாடு திரும்புவதற்கு உரிய ஆவணங்களை தயார் செய்து கொடுத்த சட்டப்பணி ஆணையச் செயலாளர் ஜெயந்தி அவர்களுக்கு நன்றி" என்றனர்.

நாடு திரும்பிய இலங்கை மீனவர்கள்

இதையடுத்து அவர்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: புதுகை மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படையினர் அத்துமீறல்

Intro:இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு 14 மாதங்களுக்குப் பிறகு விடுதலை ஆகி நாடு திரும்பினர்Body:இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் சக்திவேல் ராஜ்குமார் ஆகியோர் எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் மீன் பிடித்ததாக கூறி கடந்த 01/08/2018 அன்று வேதாரண்யத்தில் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

கைதான மீனவர்களின் 14 மாதம் தண்டனை காலம் முடிந்ததும் உரிய ஆவணங்கள் இல்லாததால் இலங்கை திரும்ப முடியாமல் இருந்தனர் இந்நிலையில் தகவல் அறிந்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் ஜெயந்தி சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்தின் உதவியுடன் ஆவணங்கள் தயார் செய்து இரண்டு பேரும் இன்று இலங்கை அனுப்பி வைக்கப்பட்டனர்

பின்னர் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்குமார் எங்கள்மீது தொடுக்கப்பட்ட வழக்கு பொய்யானது இந்த வழக்கின் உண்மை நிலையை எடுத்துக் கூறிய பின் 18 ஆம் தேதி எங்களை விடுதலை செய்தனர் நாங்கள் நாடு திரும்பதற்க்கு உரிய ஆவணங்களை தயார் செய்து கொடுத்த சட்டபணி ஆனைய செயலாளர் ஜெயந்தி அவர்களுக்கு நன்றி தெறிவித்துகொள்கிறோம் என்றார் எங்கள் போன்ற சிறையில் உள்ளவர்களையும் நாட்டிற்கு திரும்ப அனுப்ப படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் செல்கிறோம் என தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.