ETV Bharat / state

விமானத்தில் கோளாறு - உயிர் தப்பிய 183 பேர்!

author img

By

Published : Aug 5, 2019, 10:58 AM IST

சென்னை: கொச்சி செல்லயிருந்த விமானத்தில் கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திர கோளாறு காரணமாக 183 பேர் உயிர் தப்பினர்.

தனியார் பயணிகள் விமானம்

சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து கொச்சிக்கு நேற்று இரவு 8:30 மணிக்கு செல்ல வேண்டிய தனியார் பயணிகள் விமானம் காலதாமதமாக இரவு 10 மணிக்கு புறப்பட தயாரானது.

அந்த விமானத்தில் 177 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உட்பட 183 பேர் இருந்தனர். ஓடுபாதையில் விமானம் செல்ல தொடங்கியபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தால், அவசரமாக விமானத்தை நிறுத்திவிட்டு விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்பு, விமானத்தில் இருந்து பயணிகள் கீழே இறக்கப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். சுமார் 4.30 மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை 1:30 மணிக்கு மாற்று விமானம் மூலம் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாற்றை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து கொச்சிக்கு நேற்று இரவு 8:30 மணிக்கு செல்ல வேண்டிய தனியார் பயணிகள் விமானம் காலதாமதமாக இரவு 10 மணிக்கு புறப்பட தயாரானது.

அந்த விமானத்தில் 177 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உட்பட 183 பேர் இருந்தனர். ஓடுபாதையில் விமானம் செல்ல தொடங்கியபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தால், அவசரமாக விமானத்தை நிறுத்திவிட்டு விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்பு, விமானத்தில் இருந்து பயணிகள் கீழே இறக்கப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். சுமார் 4.30 மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை 1:30 மணிக்கு மாற்று விமானம் மூலம் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாற்றை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Intro:சென்னையிலிருந்து கொச்சி சென்ற விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு 183 பேர் தப்பினர்


Body:சென்னையிலிருந்து கொச்சி சென்ற விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு 183 பேர் தப்பினர் 4 1/2 மணி நேரம் தாமதமாக மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்

சென்னையிலிருந்து கொச்சிக்கு இரவு 8.30 மணிக்கு செல்ல வேண்டிய தனியார் ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம் காலதாமதமாக இரவு 10 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது

177 பயணிகள் 6 விமான ஊழியர்கள் உட்பட 183 பேர் இருந்தனர் விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார் இந்நிலையில் தொடர்ந்து இயக்குவது ஆபத்து என்பதை உணர்ந்து விமானத்தை ஓடுபாதையில் அவசரமாக நிறுத்திவிட்டு விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார் இதையடுத்து இழுவை வண்டி மூலம் விமானம் புறப்பட்ட இடத்திற்கு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது விமானப் பொறியாளர்கள் குழுவினர் விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர் இதற்கிடையே விமானத்தின் உள்ளே நீண்ட நேரமாக அமர வைக்கப் பட்ட பயணிகள் ஆத்திரமடைந்து விமான நிலையத்திற்கு உள்ளே போராட்டம் நடத்த தொடங்கினர் பின்பு பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர் இன்று அதிகாலை வரை விமானத்தை பழுதுபார்க்கும் பணி முடியவில்லை இதையடுத்து பயணிகள் மீண்டும் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர் இதனால் அதிகாரிகள் மாற்று விமானம் ஏற்பாடு செய்து இன்று அதிகாலை 1.30 மணிக்கு 4 1/2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 183 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.