திருவள்ளூர் மாவட்டத்தின் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு எஸ்பிபியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் காலையில் எஸ்பிபியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. நுங்கம்பாக்கத்தில் இருந்து எஸ்பிபியின் உடல் மாலை 7 மணியளவில் புறப்பட்டு நான்கு மணி நேரத்திற்கு பின் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு வந்தடைந்தது.
முன்னதாக அவரது மகன் சரண் பண்ணை வீட்டுக்கு வந்தார். தாமரைப்பாக்கம் பண்ணை வீடு முழுவதும் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இரண்டு கிலோ மீட்டர் முன்பாகவே தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து வாகனங்களை அனுப்பி வருகின்றனர்.
பாதுகாப்புக்காக 4 டிஎஸ்பி உள்பட 500 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். உறவினர்கள் மட்டுமே பண்ணை வீட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 7 மணி முதல் திரைப்பிரபலங்கள், பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தி அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 மணி முதல் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான பணிகள் தொடங்கி 12 மணி அளவில் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் அரசு மரியாதையும் அவருக்கு செய்யப்படவுள்ளது.