ETV Bharat / state

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் - மோடிக்கு எடப்பாடி கடிதம்! - தமிழகத்தில் புதிதாக ஆறுட மருத்துவக் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் புதிதாக ஆறு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

modi and edappadi palanisamy
author img

By

Published : Oct 23, 2019, 11:25 PM IST

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை கடந்த மாதம் டெல்லியில் சந்தித்து புதிதாக ஆறு மருத்துவக் கல்லுரிகளை தொடங்க அனுமதி கோரி மனு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக மாவட்ட தலைமை மருத்துவமனையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிற்குள் 20 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து, அதற்குரிய அனுமதியுடன் மத்திய அரசுக்கு மருத்துவக் கல்வி இயக்குனரகம் திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்தது.

மாநிலம் முழுவதும் ஆறு மருத்துவக் கல்லூரிகளைப் புதிதாகத் தொடங்க தமிழ்நாடு அரசு சார்பில் கோரப்பட்ட அனுமதியை மத்திய அரசி பரிசீலித்து வருவதாகப் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு இன்று அனுமதியளித்துள்ளது.

இந்த மருத்துக் கல்லூரிகளை அமைக்க 60 விழுக்காடு நிதியை மத்திய அரசு வழங்கும். அதன்படி சுமார் ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்குத் தலா ரூ.325 கோடி விதம் 1950 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது மருத்துவ படிப்புக்கு 3600 இடங்கள் உள்ளன. புதிதாக தொடங்கவுள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 இடங்கள் வீதம் கூடுதலாக 900 இடங்கள் மாணவர் சேர்க்கைக்குக் கிடைக்கும். இதனால் தமிழ்நாட்டிலுள்ள மருத்துவ படிப்புக்கான இடங்கள் 4500 ஆக உயரும்.

மத்திய அரசு அனுமதியளித்ததற்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: கால்நடைகளைக் காக்கவருகிறது 'அம்மா ஆம்புலன்ஸ்'!

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை கடந்த மாதம் டெல்லியில் சந்தித்து புதிதாக ஆறு மருத்துவக் கல்லுரிகளை தொடங்க அனுமதி கோரி மனு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக மாவட்ட தலைமை மருத்துவமனையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிற்குள் 20 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து, அதற்குரிய அனுமதியுடன் மத்திய அரசுக்கு மருத்துவக் கல்வி இயக்குனரகம் திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்தது.

மாநிலம் முழுவதும் ஆறு மருத்துவக் கல்லூரிகளைப் புதிதாகத் தொடங்க தமிழ்நாடு அரசு சார்பில் கோரப்பட்ட அனுமதியை மத்திய அரசி பரிசீலித்து வருவதாகப் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு இன்று அனுமதியளித்துள்ளது.

இந்த மருத்துக் கல்லூரிகளை அமைக்க 60 விழுக்காடு நிதியை மத்திய அரசு வழங்கும். அதன்படி சுமார் ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்குத் தலா ரூ.325 கோடி விதம் 1950 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது மருத்துவ படிப்புக்கு 3600 இடங்கள் உள்ளன. புதிதாக தொடங்கவுள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 இடங்கள் வீதம் கூடுதலாக 900 இடங்கள் மாணவர் சேர்க்கைக்குக் கிடைக்கும். இதனால் தமிழ்நாட்டிலுள்ள மருத்துவ படிப்புக்கான இடங்கள் 4500 ஆக உயரும்.

மத்திய அரசு அனுமதியளித்ததற்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: கால்நடைகளைக் காக்கவருகிறது 'அம்மா ஆம்புலன்ஸ்'!

Intro:6 புதிய மருத்துவ கல்லூரிகள்
துவங்க மத்திய அரசு அனுமதி


Body:6 புதிய மருத்துவ கல்லூரிகள்
துவங்க மத்திய அரசு அனுமதி

சென்னை,
தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை தூங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு உள்ளிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை கடந்த மாதம் டெல்லியில் சந்தித்து மனு அளித்தனர்.

அப்பொழுது விருதுநகர் ,ராமநாதபுரம் ,நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரியை அமைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும், அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இந்த 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக மாவட்ட தலைமை மருத்துவமனையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிற்குள் 20 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து அதற்குரிய அனுமதியுடன் மத்திய அரசுக்கு மருத்துவக் கல்வி இயக்குனரகம் திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது.

அதனடிப்படையில் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை மத்திய அரசின் பங்களிப்புடன் ஆறு மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கு அனுமதி வழங்கி மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் ,விருதுநகர் ஆகிய 6 இடங்களில் தலா ரூ. 325 கோடி செலவில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு 1950 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
மேலும் மத்திய மாநில
அரசு நிதி உதவியுடன் தூங்கப் அடுக்குதல் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டுமென மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

அதனைத் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமான பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தவுடன் இந்த ஆறு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது 24 அரசு மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தலைநகர் சென்னையில் மட்டும் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ,ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி என நான்கு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதே போல் பிற மாவட்டங்களில் 20 மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் 3600 இடங்கள் உள்ளன.
புதிதாக உள்ள 6 மருத்துவக் கல்லூரியிலும் தலா 150 இடங்கள் வீதம் 900 இடங்கள் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு கிடைக்கும். இதனால் தமிழகத்தில் 4500 எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் உருவாகும்.





Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.