தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், புதிய காவல்துறை ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமனம்
108 ஆவது சென்னை மாநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
![சென்னை மாநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமனம் சென்னை மாநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமனம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11681069-thumbnail-3x2-che.jpg?imwidth=3840)
1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அலுவலராக தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தவர் சங்கர் ஜிவால். பின்னர் சேலம், மதுரை எஸ்பியாக பணியாற்றிய அவர், மத்திய போதை பொருள் மண்டல இயக்குனராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
மத்திய அரசு பணியில் 8 வருடமும், திருச்சி காவல் ஆணையராகவும், ஐஜி உளவுத்துறை ஏடிஜிபி சிறப்பு காவல் படை என முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்து வந்துள்ளார். இவரது கடின உழைப்பிற்காக பிரதமரால் பாராட்டப்பட்டு பல பதக்கங்களை பெற்றுள்ளார். இந்நிலையில், இவர் சென்னை மாநகர 108வது காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பன்முகத் தன்மை கொண்ட வெ.இறையன்பு - கடந்து வந்த பாதை...
தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், புதிய காவல்துறை ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அலுவலராக தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தவர் சங்கர் ஜிவால். பின்னர் சேலம், மதுரை எஸ்பியாக பணியாற்றிய அவர், மத்திய போதை பொருள் மண்டல இயக்குனராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
மத்திய அரசு பணியில் 8 வருடமும், திருச்சி காவல் ஆணையராகவும், ஐஜி உளவுத்துறை ஏடிஜிபி சிறப்பு காவல் படை என முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்து வந்துள்ளார். இவரது கடின உழைப்பிற்காக பிரதமரால் பாராட்டப்பட்டு பல பதக்கங்களை பெற்றுள்ளார். இந்நிலையில், இவர் சென்னை மாநகர 108வது காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பன்முகத் தன்மை கொண்ட வெ.இறையன்பு - கடந்து வந்த பாதை...