ETV Bharat / state

போராட்டக் களமான வண்ணாரப்பேட்டை - சிஏஏவை எதிர்த்து இங்கும் ஒரு ஷாகீன் பாக்!

author img

By

Published : Feb 16, 2020, 10:26 PM IST

Updated : Feb 16, 2020, 11:01 PM IST

சென்னை : குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Shaheen Bagh-esque anti-CAA protests continue in TN
போராட்டக் களமான வண்ணாரப்பேட்டை - சிஏஏவை எதிர்த்து மீண்டும் ஒரு ஷாகீன் பாக்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளை தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் இந்தத் தடியடியில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய சில நிமிடங்களில் தாம்பரம், ஆலந்தூர், புதுப்பேட்டை, மாதவரம், செங்குன்றம், அமைந்தகரை, மண்ணடி உள்ளிட்ட சென்னை நகரின் பல பகுதிகளில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.

மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக தஞ்சை, மதுரை, திருவாரூர், திருச்சி, கோவை, விழுப்புரம், திண்டிவனம், கடலூர், கள்ளக் குறிச்சி, திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், அரியலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பல்வேறு மாவட்டங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், கண்டனக் கூட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை, போராட்டக் களத்திலிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி நேற்று மீண்டும் மக்கள் தங்களது போராட்டத்தை தொடங்கினர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினர் தடியடி நடத்திய அதே இடத்தில் ஒன்று கூடிய மக்கள், 3ஆவது நாளாக இன்றும் தங்களது போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

இந்தப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்கள் ஆர்.நல்லக்கண்ணு, வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பச்சைத் தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமாரன், அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் அமீர், ஆம் ஆத்மி நிர்வாகி வசீகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று தமது ஆதரவினை தெரிவித்தனர்.

டெல்லி ஷாகீன் பாக் போராட்ட வடிவத்தைப் போல தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க : குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழ்நாடு முழுவதும் தீவிரமடையும் மக்கள் போராட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளை தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் இந்தத் தடியடியில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய சில நிமிடங்களில் தாம்பரம், ஆலந்தூர், புதுப்பேட்டை, மாதவரம், செங்குன்றம், அமைந்தகரை, மண்ணடி உள்ளிட்ட சென்னை நகரின் பல பகுதிகளில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.

மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக தஞ்சை, மதுரை, திருவாரூர், திருச்சி, கோவை, விழுப்புரம், திண்டிவனம், கடலூர், கள்ளக் குறிச்சி, திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், அரியலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பல்வேறு மாவட்டங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், கண்டனக் கூட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை, போராட்டக் களத்திலிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி நேற்று மீண்டும் மக்கள் தங்களது போராட்டத்தை தொடங்கினர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினர் தடியடி நடத்திய அதே இடத்தில் ஒன்று கூடிய மக்கள், 3ஆவது நாளாக இன்றும் தங்களது போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

இந்தப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்கள் ஆர்.நல்லக்கண்ணு, வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பச்சைத் தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமாரன், அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் அமீர், ஆம் ஆத்மி நிர்வாகி வசீகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று தமது ஆதரவினை தெரிவித்தனர்.

டெல்லி ஷாகீன் பாக் போராட்ட வடிவத்தைப் போல தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க : குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழ்நாடு முழுவதும் தீவிரமடையும் மக்கள் போராட்டம்!

Last Updated : Feb 16, 2020, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.