ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது!

author img

By

Published : Nov 22, 2019, 7:11 AM IST

சென்னை: திருமுல்லைவாயிலில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

arrest

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது (28). இவர், அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் கோழிக்கறி கடை நடத்திவருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (35) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஷேக்முகமது அடிக்கடி ஜெயலட்சுமியின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது அவரது 14வயது மகளுக்கு 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை தெரிந்துகொண்ட ஜெயலட்சுமி, ஷேக் முகமதை கண்டித்துள்ளார். தவறுக்கு வருந்துவதாகக் கூறி ஜெயலட்சுமியின் காலில் விழுந்து ஷேக் முகமது மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து இவர்களின் தகாத உறவு மீண்டும் தொடர்ந்துள்ளது. ஆனால் ஷேக் முகமதோ, ஜெயலட்சுமியிடம் அவரது மகளை திருமணம் செய்து தரும்படி அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு ஜெயலட்சுமி மறுப்பு தெரிவித்தால், அவரை ஷேக்முகமது சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்

இந்த விவகாரம் குறித்து ஜெயலட்சுமி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஷோபாராணி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் ஷேக்முகமதுவை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு நீதிபதியின் உத்தரவின் பேரில் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது (28). இவர், அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் கோழிக்கறி கடை நடத்திவருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (35) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஷேக்முகமது அடிக்கடி ஜெயலட்சுமியின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது அவரது 14வயது மகளுக்கு 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை தெரிந்துகொண்ட ஜெயலட்சுமி, ஷேக் முகமதை கண்டித்துள்ளார். தவறுக்கு வருந்துவதாகக் கூறி ஜெயலட்சுமியின் காலில் விழுந்து ஷேக் முகமது மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து இவர்களின் தகாத உறவு மீண்டும் தொடர்ந்துள்ளது. ஆனால் ஷேக் முகமதோ, ஜெயலட்சுமியிடம் அவரது மகளை திருமணம் செய்து தரும்படி அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு ஜெயலட்சுமி மறுப்பு தெரிவித்தால், அவரை ஷேக்முகமது சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்

இந்த விவகாரம் குறித்து ஜெயலட்சுமி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஷோபாராணி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் ஷேக்முகமதுவை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு நீதிபதியின் உத்தரவின் பேரில் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்

Intro:சென்னை திருமுல்லைவாயலில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித்தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
Body:சென்னை திருமுல்லைவாயலில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித்தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், அம்பேத்கார் நகர், மரகதம் சந்திரசேகர் தெருவை சேர்ந்தவர் ஷேக் முகமது (28). இவர், அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதி முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த ஜெயலட்சுமி (35) என்பவருக்கும் இடையே கடந்த 3ஆண்டுக்கு முன்பு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஷேக்முகமது அடிக்கடி ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது அவரது மூத்த மகள் 12வயது சிறுமியை கடந்த 2017 செப்டம்பர் மாதம் பாலியல் தொல்லை செய்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட ஜெயலட்சுமி, ஷேக் முகமது கண்டித்துள்ளார் இதனையடுத்து அவர் ஜெயலட்சுமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதனை அடுத்து, அவரை ஜெயலெட்சுமி மன்னித்து விட்டு உள்ளார். இதன் பிறகும், இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் மாலை ஷேக்முகமது ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்து உள்ளார். பின்னர், அவரிடம் மகளை திருமணம் செய்து தரும்படி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனையடுத்து ஷேக்முகமது, ஜெயலட்சுமியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதனையடுத்து ஜெயலட்சுமி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷோபாராணி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் ஷேக்முகமதுவை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிபதி உத்தரவின் பேரில் அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.