ETV Bharat / state

பாலியல் வன்கொடுமை வழக்கு: வங்கி ஊழியருக்கு 10 ஆண்டு சிறை

author img

By

Published : Nov 4, 2020, 8:06 PM IST

சென்னை: பெண் தொழிலாளியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை மிரட்டல் விடுத்த தனியார் வங்கி ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கு: வங்கி ஊழியருக்கு 10 ஆண்டு சிறை
பாலியல் வன்கொடுமை வழக்கு: வங்கி ஊழியருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனியார் வங்கியில் பணியாற்றிவந்தார். 2015ஆம் ஆண்டு அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பெண்ணை காதலிப்பதாக கூறி, வீட்டுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வேப்பேரி மகளிர் காவல் நிலையத்தில் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, சுரேஷ் மீதான பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனியார் வங்கியில் பணியாற்றிவந்தார். 2015ஆம் ஆண்டு அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பெண்ணை காதலிப்பதாக கூறி, வீட்டுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வேப்பேரி மகளிர் காவல் நிலையத்தில் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, சுரேஷ் மீதான பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.