ETV Bharat / state

'கலைஞர் எழுதுகோல் விருது' பெறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன்!

author img

By

Published : Jun 2, 2022, 9:28 PM IST

நடப்பு ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கலைஞர் எழுதுகோல் விருதினை, மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் பெறவுள்ளார். இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (3.6.2022) வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.

கலைஞர் எழுதுகோல் விருது பெறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன்!
கலைஞர் எழுதுகோல் விருது பெறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன்!

சென்னை: திருச்சி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன், 1953ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’ இதழில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து ஏறத்தாழ 70 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறார். பெரும் மக்களுக்கான இதழியலில் இவ்வளவு நெடிய பணி அனுபவம் என்பது எளிதில் நிகழ்த்தற்கரிய சாதனையாகவே இருக்கிறது.

பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில், செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி சமகால பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப்பயன்பாட்டைத் தீர்மானித்தவர்களில் ஒருவராகச் செயல்பட்டிருக்கிறார். மேலும், சமகால வரலாற்றைத் தொகுத்து அளிக்கும் பணிகளிலும் சமூகநீதி விழுமியப் பார்வையோடு அப்பணியை மேற்கொண்டிருக்கிறார்.

அவருடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, தினத்தந்தி குழுமத்தினால் வெளியிடப்பட்ட ‘வரலாற்றுச் சுவடுகள்’ நூல் தொகுப்புப் பணி ஆகும். பல்லாயிரம் பிரதிகள் விற்ற இந்நூலானது, சமகால வரலாற்றை அறிந்து கொள்ளும் விதத்தில் உள்ளது.

இந்நிலையில், ‘கலைஞர் எழுதுகோல் விருது’க்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் 2021ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருதிற்காக’ மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் (87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 3) 'கலைஞர் எழுதுகோல் விருதினை’ வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.

இந்த ‘கலைஞர் எழுதுகோல் விருது’, 2021 - 2022ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும் விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு, ஆண்டுதோறும் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: First On:'தமிழ்நாட்டில் 22 பள்ளிகளில் ஒரு மாணவரும் கிடையாது... ஒற்றை இலக்க மாணவர்களைக்கொண்டு செயல்படும் 669 பள்ளிகள் - அதிர்ச்சி தகவல்!'

சென்னை: திருச்சி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன், 1953ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’ இதழில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து ஏறத்தாழ 70 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறார். பெரும் மக்களுக்கான இதழியலில் இவ்வளவு நெடிய பணி அனுபவம் என்பது எளிதில் நிகழ்த்தற்கரிய சாதனையாகவே இருக்கிறது.

பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில், செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி சமகால பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப்பயன்பாட்டைத் தீர்மானித்தவர்களில் ஒருவராகச் செயல்பட்டிருக்கிறார். மேலும், சமகால வரலாற்றைத் தொகுத்து அளிக்கும் பணிகளிலும் சமூகநீதி விழுமியப் பார்வையோடு அப்பணியை மேற்கொண்டிருக்கிறார்.

அவருடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, தினத்தந்தி குழுமத்தினால் வெளியிடப்பட்ட ‘வரலாற்றுச் சுவடுகள்’ நூல் தொகுப்புப் பணி ஆகும். பல்லாயிரம் பிரதிகள் விற்ற இந்நூலானது, சமகால வரலாற்றை அறிந்து கொள்ளும் விதத்தில் உள்ளது.

இந்நிலையில், ‘கலைஞர் எழுதுகோல் விருது’க்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் 2021ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருதிற்காக’ மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் (87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 3) 'கலைஞர் எழுதுகோல் விருதினை’ வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.

இந்த ‘கலைஞர் எழுதுகோல் விருது’, 2021 - 2022ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும் விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு, ஆண்டுதோறும் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: First On:'தமிழ்நாட்டில் 22 பள்ளிகளில் ஒரு மாணவரும் கிடையாது... ஒற்றை இலக்க மாணவர்களைக்கொண்டு செயல்படும் 669 பள்ளிகள் - அதிர்ச்சி தகவல்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.