ETV Bharat / state

உரிமையியல் நீதிபதி பதவிக்கான தேர்வு ஒத்திவைப்பு

author img

By

Published : Mar 18, 2020, 3:16 PM IST

சென்னை: உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு நீதித் துறை பணியில் அடங்கியது, உரிமையியல் நீதிபதி பதவி. இதனுடைய முதன்மை எழுத்துத் தேர்வு, கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப்பு வெளியிட்டுள்ளார். அந்தச் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நீதித் துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 176 காலிப்பணியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு, மார்ச் மாதம் 28, 29 ஆகிய நாள்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு கரோனா வைரஸ் தொற்றை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு, கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு ஏற்கனவே, நடைபெறுவதாக அறிவித்திருந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு நடைபெறும் மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கான கலந்தாய்வுக் கூட்டத்தின் தேதி மாற்றம் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆலோசித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: கரோனாவிற்கு மருந்து: விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் விஜய பாஸ்கர்!

தமிழ்நாடு நீதித் துறை பணியில் அடங்கியது, உரிமையியல் நீதிபதி பதவி. இதனுடைய முதன்மை எழுத்துத் தேர்வு, கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப்பு வெளியிட்டுள்ளார். அந்தச் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நீதித் துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 176 காலிப்பணியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு, மார்ச் மாதம் 28, 29 ஆகிய நாள்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு கரோனா வைரஸ் தொற்றை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு, கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு ஏற்கனவே, நடைபெறுவதாக அறிவித்திருந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு நடைபெறும் மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கான கலந்தாய்வுக் கூட்டத்தின் தேதி மாற்றம் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆலோசித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: கரோனாவிற்கு மருந்து: விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் விஜய பாஸ்கர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.