ETV Bharat / state

வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோயில் கார்த்திகை மகாதீபம்: அரசு பதில் அளிக்க உத்தரவு - கார்த்திகை மகாதீபம்

சென்னை: கோவை வெள்ளியங்கிரி மலையில் உள்ள சுயம்பு ஆண்டவர் கோயிலில் மகாதீபம் ஏற்றவும் பூஜை செய்யவும் அனுமதி வழங்கக்கோரிய மனுவிற்கு தமிழ்நாடு அரசு, அறநிலையத் துறை, வனத் துறை, ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court
author img

By

Published : Oct 23, 2019, 8:18 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் தாலுகா பொலுவம்பட்டி காப்புக்காடு பகுதியில் வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கார்த்திகை மகாதீபத்தையொட்டி டிசம்பர் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மகாதீபம் ஏற்றவும் பூஜை செய்யவும் அனுமதி வழங்கக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், "கார்த்திகை மகாதீபம் தினத்தையொட்டி பக்தர்களை அழைத்துச் செல்ல ஏதுவாக அணையா தீபக்குழு அமைக்கப்பட்டு 20 ஆண்டாக பக்தர்களை அழைத்துச் சென்றுவருகிறோம்.

2015ஆம் ஆண்டு முதல் வனத் துறை அனுமதி பெற்று பக்தர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்றுவருகின்றனர். அதேபோன்று இந்த ஆண்டும் மகாதீபம் எற்றவும் பூஜைகள் செய்யவும் அனுமதிக்கக்கோரி ஆகஸ்ட் 20ஆம் தேதி அரசுக்கு அனுப்பிய மனுவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் எம். சத்யநாராயணன், என். சேஷசாயி அமர்வு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டும்தானே தவிர, அவற்றைவிட கொடியவர்களுக்கு (மனிதர்கள்) கிடையாது எனக் கருத்து தெரிவித்தனர்.

மேலும், இவ்வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு, வனத் துறை, அறநிலையத் துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு இவ்வழக்கை நவம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதையும் படிங்க: கரடிகள் தொல்லை; பிடிக்குமாறு மக்கள் கோரிக்கை!

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் தாலுகா பொலுவம்பட்டி காப்புக்காடு பகுதியில் வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கார்த்திகை மகாதீபத்தையொட்டி டிசம்பர் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மகாதீபம் ஏற்றவும் பூஜை செய்யவும் அனுமதி வழங்கக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், "கார்த்திகை மகாதீபம் தினத்தையொட்டி பக்தர்களை அழைத்துச் செல்ல ஏதுவாக அணையா தீபக்குழு அமைக்கப்பட்டு 20 ஆண்டாக பக்தர்களை அழைத்துச் சென்றுவருகிறோம்.

2015ஆம் ஆண்டு முதல் வனத் துறை அனுமதி பெற்று பக்தர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்றுவருகின்றனர். அதேபோன்று இந்த ஆண்டும் மகாதீபம் எற்றவும் பூஜைகள் செய்யவும் அனுமதிக்கக்கோரி ஆகஸ்ட் 20ஆம் தேதி அரசுக்கு அனுப்பிய மனுவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் எம். சத்யநாராயணன், என். சேஷசாயி அமர்வு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டும்தானே தவிர, அவற்றைவிட கொடியவர்களுக்கு (மனிதர்கள்) கிடையாது எனக் கருத்து தெரிவித்தனர்.

மேலும், இவ்வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு, வனத் துறை, அறநிலையத் துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு இவ்வழக்கை நவம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதையும் படிங்க: கரடிகள் தொல்லை; பிடிக்குமாறு மக்கள் கோரிக்கை!

Intro:Body:கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உள்ள சுயம்பு ஆண்டவர் கோவிலில் மகாதீபம் ஏற்றவும், பூஜை செய்யவும் அனுமதி வழங்கக்கோரிய மனுவிற்கு தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் தாலுகா பொலுவம்பட்டி காப்புக்காடு பகுதியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மகாதீபத்தை ஒட்டி டிசம்பர் 10 முதல் 12 வரை மகா தீபம் ஏற்றவும், பூஜை செய்யவும் அனுமதிக்க வேண்டும் என திண்டுக்கலை சேர்ந்த சரவணன் என்ற பக்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கார்த்திகை மகாதீபத்தை ஒட்டி பக்தர்களை அழைத்து செல்ல ஏதுவாக அணையா தீபக்குழு அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளாக பக்தர்களை அழைத்து சென்று வருவதாக கூறியுள்ளார்.

2015 முதல் வனத்துறை அனுமதி பெற்று கோவிலுக்கு சென்றுவரும் நிலையில் இந்த ஆண்டு மகாதீபம் ஏற்றவும், பூஜைகள் செய்யவும் அனுமதி கோரி கடந்த ஆகஸ்ட் 20ல் அரசுக்கு அனுப்பிய மனுவில் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வு,
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டும் தானே தவிர, அவற்றை விட கொடியவர்களுக்கு கிடையாது என கருத்து தெரிவித்தனர்.

மேலும், வழக்கு குறித்து தமிழக அரசு, வனத்துறை, அறநிலையத்துறை,
மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 13க்கு ஒத்திவைத்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.