ETV Bharat / state

கமல்ஹாசன் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

author img

By

Published : May 14, 2019, 6:03 PM IST

சென்னை: சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் கூறியதற்கு இந்து அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அவர் வீடு மற்றும் அலுவுலகத்தில் காவல்துறை பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

kamal haasan

தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அனல் பறக்கும் பரப்புரை நடந்து வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் நான்கு தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கமல்ஹாசன் வீட்டில் காவல்துறை பாதுகாப்பு

வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்துவரும் கமல்ஹாசன், மே 12ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதியில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் பெயர் நாதுராம் கோட்சே எனவும் தெரிவித்தார். இந்த பேச்சு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிரொலித்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் வீடு மற்றும் ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது வீடு மற்றும் கட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அனல் பறக்கும் பரப்புரை நடந்து வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் நான்கு தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கமல்ஹாசன் வீட்டில் காவல்துறை பாதுகாப்பு

வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்துவரும் கமல்ஹாசன், மே 12ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதியில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் பெயர் நாதுராம் கோட்சே எனவும் தெரிவித்தார். இந்த பேச்சு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிரொலித்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் வீடு மற்றும் ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது வீடு மற்றும் கட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கமலஹாசனின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு.


தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளின் இடைத்தேர்தல் வருகிற 19- ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தல் போட்டி நடைபெறும் தொகுதிகளில்  அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது. நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில்  4 தொகுதிகளிலும்  வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துவரும் கமலஹாசன்  நேற்று முன் தினம்  அரவக்குறிச்சி தொகுதியில்  சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும்  காந்தி சிலை முன்பு நின்று கொண்டு சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே. காந்தியின் கொள்ளுப் பேரனான நான், அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என்ற இந்த பேச்சு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிரொலித்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் வீடு மற்றும் ஆல்வார்பேட்டை கட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வீடியோ மோஜோவில் அனுப்புகிறேன்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.