ETV Bharat / state

'பள்ளிகளில் மதம், சாதி ரீதியாக மாணவர்களை ஒன்றிணைக்க நினைத்தால் நடவடிக்கை'  - பள்ளிக் கல்வித் துறை!

சென்னை : பள்ளிகளில் சாதி, மதம் ஆகியவற்றை வைத்து மாணவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Oct 23, 2019, 1:54 PM IST

பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகளில் இந்து அமைப்புகள் மாணவர்களை மத ரீதியாக ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதைக் கண்காணித்து, அத்தகைய நடவடிக்கையினைக் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் இந்து மாணவர் மற்றும் இந்து இளைஞர் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் பள்ளிகளில் மாணவர்களை ஒன்றிணைத்து; இந்து மதத் தலைவர்கள், இந்து மதக்கோட்பாடுகள், சாஸ்திரங்கள் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு கற்பிப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இணை ஆணையர் வெங்கடேஷ், அனைத்துப் பள்ளிக்கல்வி, மெட்ரிகுலேசன், மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேற்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் கல்லூரிகளில் இந்து இளைஞர் அமைப்பினைச் சேர்ந்த மாணவர்கள், பிற மத மாணவர்களுடன் இந்து மதத்தைச் சேர்ந்த மாணவிகள் பழகுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை

பள்ளிகளில் குறிப்பிட்ட மதம், சாதி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பது, பன்முகத்தன்மைக்கு எதிரானது என்பதால், இத்தகைய நடவடிக்கைகளை தடுக்க பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : '5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு;ஆனாலும் ஃபெயில் ஆக்க மாட்டோம்' - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில் இந்து அமைப்புகள் மாணவர்களை மத ரீதியாக ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதைக் கண்காணித்து, அத்தகைய நடவடிக்கையினைக் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் இந்து மாணவர் மற்றும் இந்து இளைஞர் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் பள்ளிகளில் மாணவர்களை ஒன்றிணைத்து; இந்து மதத் தலைவர்கள், இந்து மதக்கோட்பாடுகள், சாஸ்திரங்கள் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு கற்பிப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இணை ஆணையர் வெங்கடேஷ், அனைத்துப் பள்ளிக்கல்வி, மெட்ரிகுலேசன், மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேற்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் கல்லூரிகளில் இந்து இளைஞர் அமைப்பினைச் சேர்ந்த மாணவர்கள், பிற மத மாணவர்களுடன் இந்து மதத்தைச் சேர்ந்த மாணவிகள் பழகுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை

பள்ளிகளில் குறிப்பிட்ட மதம், சாதி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பது, பன்முகத்தன்மைக்கு எதிரானது என்பதால், இத்தகைய நடவடிக்கைகளை தடுக்க பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : '5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு;ஆனாலும் ஃபெயில் ஆக்க மாட்டோம்' - அமைச்சர் செங்கோட்டையன்

Intro:ஹிந்து பெண்கள் காதலிப்பதை தடுக்க பள்ளிகளில் இளைஞ்சர்கள் அமைப்பு உருவாக்க வேண்டுமென பள்ளிக்கல்வி துறை சர்ச்சைக்குரிய நோட்டீஸ்Body: தமிழக பள்ளி கல்வி துறை சார்பில் மெட்ரிகுலேஷன் மற்றும் ஆரம்ப பள்ளிகளுக்கு சர்ச்சைக்குரிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில் இந்து தலைவர்கள் குறித்தும் இந்து தர்மங்கள் குறித்தும் அறிந்துகொள்ள இந்து மாணவர் முன்னணி,மற்றும் இந்து இளைஞர்கள் அமைப்பு ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் எனவும் அவர்களுக்கான அனைத்து உதவிகளை செய்து தர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதுConclusion:மேலும் ஹிந்து பெண்கள் மற்றவர்களை காதலிப்பதை தடுக்க இந்த மாணவர் அமைப்பு செயல் படும் என சர்ச்சைக்குரிய கருத்தை சுற்றறிக்கையாக உடனே நடவடிக்கை எடுக்கும் படியும் வலியுறுத்தி அனுப்பியுள்ளது.இந்தி சமஸ்கிருத திணிப்பை தொடர்ந்து தமிழகத்தில் பள்ளியில் இந்துத்துவ கொள்கைகளையும்அமைப்புகளையும் வலுப்பெற செய்து மாணவர்கள் மத்தியில் மத பிரிவினைக்கு வழி செய்யும் விதமாக அமைந்துள்ளது.இந்த சுற்றறிக்கை பள்ளி கல்வி துறை அமைச்சர் அனுமதி பெற்று அனுப்பப்பட்டதா அல்லது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவா என குழப்பம் ஏற்பட்டுள்ளது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.