ETV Bharat / state

ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துக்கள் - தமிழக அரசுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Nov 26, 2022, 7:46 PM IST

கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் குளங்களை பாதுகாக்கவும், அடிப்படை வசதிகளைக் ஏற்படுத்தவும் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharatஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துக்கள் - தமிழக அரசுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
Etv Bharatஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துக்கள் - தமிழக அரசுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை:சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோயில் குளங்கள் ஆக்கிரமிப்பு குறித்து வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘பெரம்பலூர் பொன்னம்பல சுவாமி மற்றும் ஐய்யனார் கோயில்களை பார்வையிட்ட போது, கோயில் நிலங்கள் மற்றும் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததாகவும், இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கோயில் சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் இருந்து மீட்க மாவட்ட அளவில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று(நவ.26) பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு - இலவச மின்சாரத்திற்கு பாதிப்பு இல்லை

சென்னை:சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோயில் குளங்கள் ஆக்கிரமிப்பு குறித்து வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘பெரம்பலூர் பொன்னம்பல சுவாமி மற்றும் ஐய்யனார் கோயில்களை பார்வையிட்ட போது, கோயில் நிலங்கள் மற்றும் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததாகவும், இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கோயில் சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் இருந்து மீட்க மாவட்ட அளவில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று(நவ.26) பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு - இலவச மின்சாரத்திற்கு பாதிப்பு இல்லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.