ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அதிமுகவின் அறிக்கைக்கு அமைச்சர் கண்டனம்

author img

By

Published : Oct 15, 2021, 6:11 AM IST

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையைக் கண்டித்து அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து வெளியிட்ட அறிக்கைக்குப் பதில் கூறும்விதமாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கான இடைத்தேர்தல் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் சிறப்பான முறையில் திட்டமிட்டு நடுநிலையோடு, தேவையான பாதுகாப்பு வசதிகளோடு நடத்தியது.

பின் இதில் எந்தவித சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படாதவண்ணம் தேர்தல் நடத்தப்பட்டு அக்டோபர் 12 அன்று வாக்கு எண்ணிக்கையும் நேர்மையாக நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஐந்து மாத கால ஆட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் அங்கீகாரம் தந்து ஊக்குவிக்கின்ற வகையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியைத் தந்துள்ளார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் அளித்த அந்த மகத்தான வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தந்த அறிக்கையில், தங்களது இயக்கம் மக்களால் புறக்கணிக்கப்பட்ட உண்மையை மறந்து தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்குத் தந்த படுதோல்வியை மறைத்து; முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குத் மக்கள் தந்த பேராதரவால் பெற்ற மகத்தான வெற்றியையும், மேற்படி தேர்தலை, ஜனநாயக முறையில் நேர்மையாக, நடுநிலையோடு, நடத்திய தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தையும், கொச்சைப்படுத்துகின்ற வகையில் வெளியிட்டுள்ள அவர்களின் கற்பனை அறிக்கைக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

2016இல் நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை மூன்று ஆண்டுகள் தள்ளிப்போட்டது அதிமுக அரசு. மாநிலத் தேர்தல் ஆணையம் 2016 செப்டம்பர் 26இல் அறிவிப்பு வெளியிட்ட அன்றே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அந்த ஆணையத்தை தனது கைப்பாவை ஆக்கியது அதிமுக.

'தேர்தல் அறிவிப்பு ஆளுங்கட்சிக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது' என்று உயர் நீதிமன்றம் கண்டனம் செய்து தேர்தல் அறிவிப்பையே ரத்துசெய்யும் நிலைக்குத் தள்ளியது அதிமுக அரசு. பிறகு உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமல், மாநிலத் தேர்தல் ஆணையரையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்கவைத்தது அதிமுக அரசு.

தேர்தல் நடத்துகிறோம் என உச்ச நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்துவிட்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று 'வார்டு மறுவரையறை ஆணையத்தை' உருவாக்கி அவசரச் சட்டம் பிறப்பித்து உள்ளாட்சித் தேர்தலை வேண்டுமென்றே தாமதம் செய்தது அதிமுக அரசு. பிறகு மாவட்டங்களைப் பிரித்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தவிடாமல் செய்தது அதிமுக அரசு.

பிறகு ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புறத் தேர்தல் எனப் பிரித்து, முதலில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை அதுவும் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிக்க அறிவித்தது அதிமுக அரசு.

அதிமுக நடத்தத் தவறிய ஊரக உள்ளாட்சித் தேர்தலை இப்போது கழக அரசு நடத்தி இருக்கிறது. ஒருவர் இரு வேட்பாளருக்கு முன் மொழிந்த காரணத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் விதிப்படி நிராகரித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான பாஸ்கரபாண்டியன் “வாக்கு எண்ணிக்கை நாளன்று நான் சொல்லக்கூடிய வேட்பாளர்களைத்தான் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும்” எனக் கூறியதாக ஒரு கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஒரு காரணம் சொல்லியிருக்கிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இப்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. அங்கு அதிமுகவும் வெற்றிபெற்றுள்ளது. எத்தகைய அபாண்ட பழியை, புளுகையை ஒரு மாவட்டத் தேர்தல் அலுவலர் மீது சுமத்துகிறார் எடப்பாடி பழனிசாமி என்பது அதிமுகவும் அங்கு வெற்றிபெற்றுள்ளதிலேயே தெரியவருகிறது.

திருப்பத்தூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அத்துமீறி வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றதாகக் கூறியிருக்கிறார்கள். அந்தப் புகாரைத் தொடர்ந்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரே அந்த வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்று 'வாக்குப்பெட்டிகள் பத்திரமாக இருக்கின்றன; எதுவும் பிரிக்கப்படவில்லை' என்று கூறியிருக்கிறார். தன் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் சொன்னதைக்கூட ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிந்துகொள்ள முன்வரவில்லை.

இருவரும் கொடுத்துள்ள ஐந்து பக்க அறிக்கையில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு நிகழ்ச்சியைக்கூட சுட்டிக்காட்ட முடியவில்லை. இதிலிருந்தே மாநிலத் தேர்தல் ஆணையம் அமைதியாகவும், நடுநிலையுடனும் தேர்தலை நடத்தியுள்ளது எனத் தெளிவாகிறது. கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் மாநிலத் தேர்தல் ஆணையத்தை தங்களின் கைப்பாவையாக ஆட்டிப்படைத்த, பழைய ஞாபகத்தில் இந்தக் கற்பனைக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நீலம் நிதிநல்கை சார்பில் ஆய்வுக்கட்டுரை எழுதிய ஐந்து பேருக்கு நிதி உதவி

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து வெளியிட்ட அறிக்கைக்குப் பதில் கூறும்விதமாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கான இடைத்தேர்தல் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் சிறப்பான முறையில் திட்டமிட்டு நடுநிலையோடு, தேவையான பாதுகாப்பு வசதிகளோடு நடத்தியது.

பின் இதில் எந்தவித சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படாதவண்ணம் தேர்தல் நடத்தப்பட்டு அக்டோபர் 12 அன்று வாக்கு எண்ணிக்கையும் நேர்மையாக நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஐந்து மாத கால ஆட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் அங்கீகாரம் தந்து ஊக்குவிக்கின்ற வகையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியைத் தந்துள்ளார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் அளித்த அந்த மகத்தான வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தந்த அறிக்கையில், தங்களது இயக்கம் மக்களால் புறக்கணிக்கப்பட்ட உண்மையை மறந்து தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்குத் தந்த படுதோல்வியை மறைத்து; முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குத் மக்கள் தந்த பேராதரவால் பெற்ற மகத்தான வெற்றியையும், மேற்படி தேர்தலை, ஜனநாயக முறையில் நேர்மையாக, நடுநிலையோடு, நடத்திய தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தையும், கொச்சைப்படுத்துகின்ற வகையில் வெளியிட்டுள்ள அவர்களின் கற்பனை அறிக்கைக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

2016இல் நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை மூன்று ஆண்டுகள் தள்ளிப்போட்டது அதிமுக அரசு. மாநிலத் தேர்தல் ஆணையம் 2016 செப்டம்பர் 26இல் அறிவிப்பு வெளியிட்ட அன்றே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அந்த ஆணையத்தை தனது கைப்பாவை ஆக்கியது அதிமுக.

'தேர்தல் அறிவிப்பு ஆளுங்கட்சிக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது' என்று உயர் நீதிமன்றம் கண்டனம் செய்து தேர்தல் அறிவிப்பையே ரத்துசெய்யும் நிலைக்குத் தள்ளியது அதிமுக அரசு. பிறகு உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமல், மாநிலத் தேர்தல் ஆணையரையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்கவைத்தது அதிமுக அரசு.

தேர்தல் நடத்துகிறோம் என உச்ச நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்துவிட்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று 'வார்டு மறுவரையறை ஆணையத்தை' உருவாக்கி அவசரச் சட்டம் பிறப்பித்து உள்ளாட்சித் தேர்தலை வேண்டுமென்றே தாமதம் செய்தது அதிமுக அரசு. பிறகு மாவட்டங்களைப் பிரித்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தவிடாமல் செய்தது அதிமுக அரசு.

பிறகு ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புறத் தேர்தல் எனப் பிரித்து, முதலில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை அதுவும் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிக்க அறிவித்தது அதிமுக அரசு.

அதிமுக நடத்தத் தவறிய ஊரக உள்ளாட்சித் தேர்தலை இப்போது கழக அரசு நடத்தி இருக்கிறது. ஒருவர் இரு வேட்பாளருக்கு முன் மொழிந்த காரணத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் விதிப்படி நிராகரித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான பாஸ்கரபாண்டியன் “வாக்கு எண்ணிக்கை நாளன்று நான் சொல்லக்கூடிய வேட்பாளர்களைத்தான் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும்” எனக் கூறியதாக ஒரு கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஒரு காரணம் சொல்லியிருக்கிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இப்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. அங்கு அதிமுகவும் வெற்றிபெற்றுள்ளது. எத்தகைய அபாண்ட பழியை, புளுகையை ஒரு மாவட்டத் தேர்தல் அலுவலர் மீது சுமத்துகிறார் எடப்பாடி பழனிசாமி என்பது அதிமுகவும் அங்கு வெற்றிபெற்றுள்ளதிலேயே தெரியவருகிறது.

திருப்பத்தூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அத்துமீறி வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றதாகக் கூறியிருக்கிறார்கள். அந்தப் புகாரைத் தொடர்ந்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரே அந்த வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்று 'வாக்குப்பெட்டிகள் பத்திரமாக இருக்கின்றன; எதுவும் பிரிக்கப்படவில்லை' என்று கூறியிருக்கிறார். தன் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் சொன்னதைக்கூட ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிந்துகொள்ள முன்வரவில்லை.

இருவரும் கொடுத்துள்ள ஐந்து பக்க அறிக்கையில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு நிகழ்ச்சியைக்கூட சுட்டிக்காட்ட முடியவில்லை. இதிலிருந்தே மாநிலத் தேர்தல் ஆணையம் அமைதியாகவும், நடுநிலையுடனும் தேர்தலை நடத்தியுள்ளது எனத் தெளிவாகிறது. கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் மாநிலத் தேர்தல் ஆணையத்தை தங்களின் கைப்பாவையாக ஆட்டிப்படைத்த, பழைய ஞாபகத்தில் இந்தக் கற்பனைக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நீலம் நிதிநல்கை சார்பில் ஆய்வுக்கட்டுரை எழுதிய ஐந்து பேருக்கு நிதி உதவி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.