ETV Bharat / state

சென்னையில் போதைப்பொருள் சோதனையில் ரூ.2 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!

author img

By

Published : Jun 23, 2022, 10:43 PM IST

Updated : Jun 23, 2022, 10:58 PM IST

சென்னையில் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ரூ.2 கோடி ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹவாலா பணம் பறிமுதல்
ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை: ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் துறைமுகம் உதவி ஆணையர் வீர குமார் தலைமையிலான தனிப்படை காவலர்கள் வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணடி தம்புசெட்டித் தெரு பகுதியில் இன்று (ஜூன் 23) மதியம் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில், வந்த ஆந்திர மாநிலப் பதிவு எண் கொண்ட காரை மடக்கி, தனிப்படை காவலர்கள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் காரின் பின்புறம் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் காரில் பணத்துடன் வந்த இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

சென்னையில் ரூ.2 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

விசாரணையில் பிடிபட்ட நபர்கள் ஆந்திராவைச் சேர்ந்த ஜெய்சங்கர் மற்றும் நாராயணன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் ஆந்திராவில் தங்க நகைக்கடை நடத்தி வருவதாகவும், சென்னையில் தங்கம் வாங்குவதற்காக வந்த போது காவல் துறையினரிடம் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிடிபட்ட தொகை சுமார் 2 கோடி ரூபாய் என்பதும், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடி ரூபாய் பணமும், பிடிபட்ட இரு நபர்களையும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் பிடிப்பட்ட நபர்கள் தெரிவித்த இடத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உயிரோடு இருப்பவருக்கு இறப்புச்சான்றிதழ் கொடுத்த அலுவலர் - இது விழுப்புரம் சம்பவம்!

சென்னை: ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் துறைமுகம் உதவி ஆணையர் வீர குமார் தலைமையிலான தனிப்படை காவலர்கள் வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணடி தம்புசெட்டித் தெரு பகுதியில் இன்று (ஜூன் 23) மதியம் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில், வந்த ஆந்திர மாநிலப் பதிவு எண் கொண்ட காரை மடக்கி, தனிப்படை காவலர்கள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் காரின் பின்புறம் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் காரில் பணத்துடன் வந்த இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

சென்னையில் ரூ.2 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

விசாரணையில் பிடிபட்ட நபர்கள் ஆந்திராவைச் சேர்ந்த ஜெய்சங்கர் மற்றும் நாராயணன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் ஆந்திராவில் தங்க நகைக்கடை நடத்தி வருவதாகவும், சென்னையில் தங்கம் வாங்குவதற்காக வந்த போது காவல் துறையினரிடம் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிடிபட்ட தொகை சுமார் 2 கோடி ரூபாய் என்பதும், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடி ரூபாய் பணமும், பிடிபட்ட இரு நபர்களையும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் பிடிப்பட்ட நபர்கள் தெரிவித்த இடத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உயிரோடு இருப்பவருக்கு இறப்புச்சான்றிதழ் கொடுத்த அலுவலர் - இது விழுப்புரம் சம்பவம்!

Last Updated : Jun 23, 2022, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.