ETV Bharat / state

வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதா? ஆய்வுக்கு தயாராகும் அமமுக

author img

By

Published : May 29, 2019, 3:15 PM IST

சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு வல்லுனர்கள் குழு அமைத்து அதற்கான பணிகள் நடந்து வருகிறது என்று அமமுக சார்பு தெரிவித்துள்ளது.

அரசியல் தலைவர்கள்


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக படுதோல்வியடைந்து வாக்கு விழுக்காட்டில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அமமுகவில் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், என்.ஜி.பார்த்திபன், ஜி.செந்தமிழன், ஜோதி முருகன் ஆகியோர் மக்களின் செல்வாக்கை இழந்தனர். தேர்தல் பரப்புரையின்போது அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த தேர்தலில் வெற்றியை நாட்டி அதிமுகவிற்கு பயத்தைக் காட்டுவோம் என்று சூளுரைத்தார். ஆனால், தற்போது படுதோல்வி அடைந்துள்ள நிலையில் தேர்தல் தோல்வி குறித்து பேச மறுப்பது ஏன்? என பலரும் பலவிதமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சந்திப்பாக நேற்று தினகரன் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேசினார். ஆனால், இந்த சந்திப்பிற்கு பின்னர் வழக்கம் போல் அதிமுகவும், அமமுகவும் இணைய உள்ளது என்கிற பேச்சுகள் மீண்டும் அடிபட தொடங்கியுள்ளன. இதற்கு விளக்கம் அளித்த அமமுக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் 'அதிமுக -அமமுக கூட்டணிக்கு வாய்ப்பில்லை. ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தாலும் எங்கள் தரப்பில் ஏதேனும் செய்ய முயன்றால் அது திமுகவுக்கு சாதகமாக முடிந்துவிடும் என்பதால், அடுத்த கட்டமாக கட்சிப் பணிகளில் இறங்கி மக்களை சந்திப்பதென கட்சி முடிவு செய்ய உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்படும்பட்சத்தில் திமுகவிற்கு சாதகமாக அதிமுக உறுப்பினர்கள் 10 பேர் வாக்களிக்க வாய்ப்பிருப்பதாக அமமுகவினர் தரப்பில் தகவல்கள் கசிந்துள்ளன. அதிமுகவை சேர்ந்த கலைச்செல்வன், பிரபு உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்கள் என்ன செய்ய காத்திருக்கின்றனர் என்பதுதான் அதிமுகவினருக்கு பீதியைக் கிளப்பியுள்ளது. இது ஒருபக்கம் இருந்தாலும் திமுகவினர் செந்தில் பாலாஜிக்கு வலை வீசியது போன்று செந்தில் பாலாஜியை வைத்து அதிமுகவில் உள்ள நம்பகத்தன்மையான ஐந்து எம்.எல்.ஏக்களுக்கு மு.க. ஸ்டாலின், வலை வீசி வருவதாக கூறப்படுகிறது.

திமுகவினரிடையே ராஜ்ய சபாவிற்கு யாரை அனுப்புவது என்ற குழப்பம் நீடித்து வருவதால் நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிகிறது. மோடி பிரதமராக பதவியேற்றதும், திமுக சார்பில் மூன்று ராஜ்ய சபா எம்பிக்களை நிர்ணயம் செய்த பிறகு, அதிமுக ஆட்சி கவிழ அதிக வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அமமுக கட்சிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக அமமுகவினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இதுகுறித்து அமமுக தெரிவித்துள்ள விளக்கம் பின்வருமாறு

அமமுக போட்டியிட்ட 558 பூத்களில் ஒரு வாக்குக்கூட பதிவாகவில்லை. ஒவ்வொரு பூத்திலும் நான்கு ஏஜெண்ட்கள் அமமுகவிற்காக பணியாற்றி உள்ளனர். ஆனால், அவர்களது வாக்குகளும் இல்லை என்கிறார்கள். இந்த தேர்தல் மோடியின் வெற்றி என்று சொல்வதைவிட இயந்திரங்களின் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். 2018 டிசம்பரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 303 சீட்கள் வெல்வோம் என்றார். அது சரியாக நடந்தது எப்படி என்றும் சந்தேகத்தை கிளப்பும் அமமுகவினர், மோடியை எதிர்த்த ஐவர் முற்றிலுமாக வாஷ் அவுட் ஆக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் குறிவைத்து வாஷ் அவுட் ஆகியுள்ளதால் எங்களது சந்தேகம் வலுவடைகிறது. வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு வல்லுனர்கள் குழு அமைத்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று அமமுக தரப்பினர் கூறுகின்றனர். மேலும், விரைவில் மோடிக்கு பாடம் புகட்டுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக படுதோல்வியடைந்து வாக்கு விழுக்காட்டில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அமமுகவில் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், என்.ஜி.பார்த்திபன், ஜி.செந்தமிழன், ஜோதி முருகன் ஆகியோர் மக்களின் செல்வாக்கை இழந்தனர். தேர்தல் பரப்புரையின்போது அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த தேர்தலில் வெற்றியை நாட்டி அதிமுகவிற்கு பயத்தைக் காட்டுவோம் என்று சூளுரைத்தார். ஆனால், தற்போது படுதோல்வி அடைந்துள்ள நிலையில் தேர்தல் தோல்வி குறித்து பேச மறுப்பது ஏன்? என பலரும் பலவிதமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சந்திப்பாக நேற்று தினகரன் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேசினார். ஆனால், இந்த சந்திப்பிற்கு பின்னர் வழக்கம் போல் அதிமுகவும், அமமுகவும் இணைய உள்ளது என்கிற பேச்சுகள் மீண்டும் அடிபட தொடங்கியுள்ளன. இதற்கு விளக்கம் அளித்த அமமுக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் 'அதிமுக -அமமுக கூட்டணிக்கு வாய்ப்பில்லை. ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தாலும் எங்கள் தரப்பில் ஏதேனும் செய்ய முயன்றால் அது திமுகவுக்கு சாதகமாக முடிந்துவிடும் என்பதால், அடுத்த கட்டமாக கட்சிப் பணிகளில் இறங்கி மக்களை சந்திப்பதென கட்சி முடிவு செய்ய உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்படும்பட்சத்தில் திமுகவிற்கு சாதகமாக அதிமுக உறுப்பினர்கள் 10 பேர் வாக்களிக்க வாய்ப்பிருப்பதாக அமமுகவினர் தரப்பில் தகவல்கள் கசிந்துள்ளன. அதிமுகவை சேர்ந்த கலைச்செல்வன், பிரபு உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்கள் என்ன செய்ய காத்திருக்கின்றனர் என்பதுதான் அதிமுகவினருக்கு பீதியைக் கிளப்பியுள்ளது. இது ஒருபக்கம் இருந்தாலும் திமுகவினர் செந்தில் பாலாஜிக்கு வலை வீசியது போன்று செந்தில் பாலாஜியை வைத்து அதிமுகவில் உள்ள நம்பகத்தன்மையான ஐந்து எம்.எல்.ஏக்களுக்கு மு.க. ஸ்டாலின், வலை வீசி வருவதாக கூறப்படுகிறது.

திமுகவினரிடையே ராஜ்ய சபாவிற்கு யாரை அனுப்புவது என்ற குழப்பம் நீடித்து வருவதால் நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிகிறது. மோடி பிரதமராக பதவியேற்றதும், திமுக சார்பில் மூன்று ராஜ்ய சபா எம்பிக்களை நிர்ணயம் செய்த பிறகு, அதிமுக ஆட்சி கவிழ அதிக வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அமமுக கட்சிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக அமமுகவினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இதுகுறித்து அமமுக தெரிவித்துள்ள விளக்கம் பின்வருமாறு

அமமுக போட்டியிட்ட 558 பூத்களில் ஒரு வாக்குக்கூட பதிவாகவில்லை. ஒவ்வொரு பூத்திலும் நான்கு ஏஜெண்ட்கள் அமமுகவிற்காக பணியாற்றி உள்ளனர். ஆனால், அவர்களது வாக்குகளும் இல்லை என்கிறார்கள். இந்த தேர்தல் மோடியின் வெற்றி என்று சொல்வதைவிட இயந்திரங்களின் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். 2018 டிசம்பரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 303 சீட்கள் வெல்வோம் என்றார். அது சரியாக நடந்தது எப்படி என்றும் சந்தேகத்தை கிளப்பும் அமமுகவினர், மோடியை எதிர்த்த ஐவர் முற்றிலுமாக வாஷ் அவுட் ஆக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் குறிவைத்து வாஷ் அவுட் ஆகியுள்ளதால் எங்களது சந்தேகம் வலுவடைகிறது. வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு வல்லுனர்கள் குழு அமைத்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று அமமுக தரப்பினர் கூறுகின்றனர். மேலும், விரைவில் மோடிக்கு பாடம் புகட்டுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 29.05.19

வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டிருந்ததா!! ஆய்வுக்கு தாயாராகும் அமமுக...  
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 10 எம்.எல்.ஏக்கள் காணாமல் போவார்கள்...!!

நடந்து முடிந்த தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட அமமுகவின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என விசாரணையில் இறங்கினோம்.., தேர்தல் 
முடிவுகளுக்குப் பிந்தைய சந்திப்பாக நேற்று தினகரன் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்துள்ளார்.
வழக்கம் போல அதிமுகவும், அமமுகவும் இணைய உள்ளது என்கிற பேச்சுகள் மீண்டும் அடிபடத் துவங்கியுள்ள நிலையில் ''அதற்கெல்லாம் எப்போதுமே வாய்ப்பில்லை. ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தாலும் எங்கள் தரப்பில் ஏதேனும் செய்ய முயன்றால் அது திமுகவுக்கு சாதகமாக முடிந்துவிடும் என்பதால், அடுத்த கட்டமாக கட்சிப் பணிகளில் இறங்கி மக்களை சந்திப்பதென கட்சி முடிவு செய்ய உள்ளது" என்கிறார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்..

நம்பிக்கையில்லா தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்படும் பட்சத்தில் குறைந்தது 10 உறுப்பினர்கள் அதிமுக தரப்பில் காணாமல் போவார்கள் என்கிற கொசுறு தகவலை சொல்லி அதிர வைக்கின்றனர் அமமுகவினர்..
கலைச்செல்வன், பிரபு உள்ளிட்ட மூன்று எம்.எல்.ஏக்கள் என்ன செய்யக் காத்திருக்கிறார்கள் என்பதிலும் குழப்பம் நீடித்தபடியே உள்ளது. 
இருப்பினும், திமுக தரப்பில்
செந்தில் பாலாஜியை வைத்து 5 எம்.எல்.ஏக்களுக்கு வலை வீசி வரும் ஸ்டாலின், ஆட்சியை கைப்பற்றும் முயற்சிகளை செய்து வருகின்றார் என்று கூறப்படுகிறது..

தமிழக நிலவரம் இப்படியிருக்க,
அமமுக போட்டியிட்ட 558 பூத்களில் 0 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. ஒவ்வொரு பூத்திலும் 4 ஏஜெண்ட்கள் அமமுகவிற்காக பணியாற்றி உள்ளனர். ஆனால், அவர்களது வாக்குகளும் இல்லை என்கிறார்கள்..
 இந்த தேர்தல் மோடியின் வெற்றி என்று சொல்வதை விட இயந்திரங்களின் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.. 100% நம்பகத்தன்மை இல்லாதததுதான் வாக்கு இயந்திரங்கள். 2018 டிசம்பரில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் 303 சீட்கள் வெல்வோம் என்றார். அது சரியாக நடந்தது எப்படி என்றும் சந்தேகத்தை கிளப்பும் அமமுகவினர், 
மோடியை எதிர்த்த ஐவர் முற்றிலுமாக வாஷ் அவுட் ஆக்கப்பட்டுள்ளனர். 
குறிப்பாக மம்தாபானர்ஜி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் குறிவைத்து வாஷ் அவுட் ஆகியுள்ளதால் எங்களது சந்தேகம் வலுவடைகிறது என்கின்றனர்...

ராகுலை அசிங்கப்படுத்த அமேதியிலும் காங்கிரஸ் வாஷ் அவுட் செய்யப்பட்டுள்ளது.. என்னும் அமமுகவினர், 
சம்மந்தப்பட்ட வாக்கு எந்திரங்கள் தந்திரமாக ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் அலைவரிசை போன்றதொரு அலைவரிசை மூலம் முற்றாக ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று நாங்கள் உறுதியாக சந்தேகிக்கிறோம் எனறு பீதி கிளப்புகின்றனர்..

முக்கியமாக,
எங்கள் தரப்பில் ஒவ்வொரு பூத்களிலும் எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்பதை கணெக்கெடுத்து அவர்களிடம் அபிடவிட் பெற்று, அவர்கள் போட்ட வாக்குகள் வாக்கு எந்திரத்தில் காட்டப்படவில்லை என்கிற புகாரை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம்.. 
மேலும், வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டிருந்ததா என ஆய்வு செய்ய சிறப்பு வல்லுனர்கள் குழு அமைத்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்கின்றனர்..

---------- Forwarded message ----------
From: "SINTHALAI PERUMAL S" <sinthalaiperumal.s@etvbharat.com>
Date: May 29, 2019 12:30
Subject: Ammk verses election commission special story..
To: "Tamil Desk" <tamildesk@etvbharat.com>, "RAVIKUMAR N" <ravikumar.n@etvbharat.com>, "Prince Kumar" <prince.kumar@etvbharat.com>
Cc:


ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 29.05.19

வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டிருந்ததா!! ஆய்வுக்கு தாயாராகும் அமமுக...  
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 10 எம்.எல்.ஏக்கள் காணாமல் போவார்கள்...!!

நடந்து முடிந்த தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட அமமுகவின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என விசாரணையில் இறங்கினோம்.., தேர்தல் 
முடிவுகளுக்குப் பிந்தைய சந்திப்பாக நேற்று தினகரன் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்துள்ளார்.
வழக்கம் போல அதிமுகவும், அமமுகவும் இணைய உள்ளது என்கிற பேச்சுகள் மீண்டும் அடிபடத் துவங்கியுள்ள நிலையில் ''அதற்கெல்லாம் எப்போதுமே வாய்ப்பில்லை. ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தாலும் எங்கள் தரப்பில் ஏதேனும் செய்ய முயன்றால் அது திமுகவுக்கு சாதகமாக முடிந்துவிடும் என்பதால், அடுத்த கட்டமாக கட்சிப் பணிகளில் இறங்கி மக்களை சந்திப்பதென கட்சி முடிவு செய்ய உள்ளது" என்கிறார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்..

நம்பிக்கையில்லா தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்படும் பட்சத்தில் குறைந்தது 10 உறுப்பினர்கள் அதிமுக தரப்பில் காணாமல் போவார்கள் என்கிற கொசுறு தகவலை சொல்லி அதிர வைக்கின்றனர் அமமுகவினர்..
கலைச்செல்வன், பிரபு உள்ளிட்ட மூன்று எம்.எல்.ஏக்கள் என்ன செய்யக் காத்திருக்கிறார்கள் என்பதிலும் குழப்பம் நீடித்தபடியே உள்ளது. 
இருப்பினும், திமுக தரப்பில்
செந்தில் பாலாஜியை வைத்து 5 எம்.எல்.ஏக்களுக்கு வலை வீசி வரும் ஸ்டாலின், ஆட்சியை கைப்பற்றும் முயற்சிகளை செய்து வருகின்றார் என்று கூறப்படுகிறது..

தமிழக நிலவரம் இப்படியிருக்க,
அமமுக போட்டியிட்ட 558 பூத்களில் 0 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. ஒவ்வொரு பூத்திலும் 4 ஏஜெண்ட்கள் அமமுகவிற்காக பணியாற்றி உள்ளனர். ஆனால், அவர்களது வாக்குகளும் இல்லை என்கிறார்கள்..
 இந்த தேர்தல் மோடியின் வெற்றி என்று சொல்வதை விட இயந்திரங்களின் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.. 100% நம்பகத்தன்மை இல்லாதததுதான் வாக்கு இயந்திரங்கள். 2018 நவம்பரில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த மோடி 303 சீட்கள் வெல்வோம் என்றார். அது சரியாக நடந்தது எப்படி என்றும் சந்தேகத்தை கிளப்பும் அமமுகவினர், 
மோடியை எதிர்த்த ஐவர் முற்றிலுமாக வாஷ் அவுட் ஆக்கப்பட்டுள்ளனர். 
குறிப்பாக மம்தாபானர்ஜி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் குறிவைத்து வாஷ் அவுட் ஆகியுள்ளதால் எங்களது சந்தேகம் வலுவடைகிறது என்கின்றனர்...

ராகுலை அசிங்கப்படுத்த அமேதியிலும் காங்கிரஸ் வாஷ் அவுட் செய்யப்பட்டுள்ளது.. என்னும் அமமுகவினர், 
சம்மந்தப்பட்ட வாக்கு எந்திரங்கள் தந்திரமாக ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் அலைவரிசை போன்றதொரு அலைவரிசை மூலம் முற்றாக ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று நாங்கள் உறுதியாக சந்தேகிக்கிறோம் எனறு பீதி கிளப்புகின்றனர்..

முக்கியமாக,
எங்கள் தரப்பில் ஒவ்வொரு பூத்களிலும் எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்பதை கணெக்கெடுத்து அவர்களிடம் அபிடவிட் பெற்று, அவர்கள் போட்ட வாக்குகள் வாக்கு எந்திரத்தில் காட்டப்படவில்லை என்கிற புகாரை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம்.. 
மேலும், வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டிருந்ததா என ஆய்வு செய்ய சிறப்பு வல்லுனர்கள் குழு அமைத்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்கின்றனர்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.