ETV Bharat / state

தேசிய கீதத்தில் எழுத்துப்பிழை! செங்கோட்டையன் பதில்

author img

By

Published : Jun 21, 2019, 11:18 AM IST

சென்னை: பாடப்புத்தகங்களில் தேசிய கீதத்தில் உள்ள தவறினை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத, மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும். யோகாவின் மூலம் அனைவரும் உடல், மன ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.

பள்ளி மாணவர்கள் கவனம் சிதறாமல் கல்வி கற்பதற்கு யோகா உதவுகிறது. தமிழ்நாட்டில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா கற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு 13 ஆயிரம் யோகா பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பள்ளி பாடப்புத்தகங்களில் தேசியகீதத்தில் உள்ள தவறினை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணியினை இரண்டே ஆண்டில் முடித்துள்ளோம்.

தேசிய கீதத்தில் உள்ள எழுத்துப்பிழை குறித்து செங்கோட்டையன் பதில்

இதனால் சிறிய பிழைகள் ஏற்பட்டுள்ளது. அவற்றை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும் ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என உள்ளது குறித்து கேட்டதற்கு, தமிழ்நாட்டில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நடைபெறும் இந்த ஆட்சியில் எப்போதும் இரு மொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத, மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும். யோகாவின் மூலம் அனைவரும் உடல், மன ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.

பள்ளி மாணவர்கள் கவனம் சிதறாமல் கல்வி கற்பதற்கு யோகா உதவுகிறது. தமிழ்நாட்டில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா கற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு 13 ஆயிரம் யோகா பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பள்ளி பாடப்புத்தகங்களில் தேசியகீதத்தில் உள்ள தவறினை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணியினை இரண்டே ஆண்டில் முடித்துள்ளோம்.

தேசிய கீதத்தில் உள்ள எழுத்துப்பிழை குறித்து செங்கோட்டையன் பதில்

இதனால் சிறிய பிழைகள் ஏற்பட்டுள்ளது. அவற்றை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும் ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என உள்ளது குறித்து கேட்டதற்கு, தமிழ்நாட்டில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நடைபெறும் இந்த ஆட்சியில் எப்போதும் இரு மொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Intro:தேசியகீதத்தில் எழுத்துப்பிழை
அமைச்சர் செங்கோட்டையன் பதில்Body:சென்னை, தேசிய கீதத்தில் உள்ள எழுத்துப் பணியை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் யோகா செய்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், யோகாவின் மூலம் அனைவரும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். பள்ளி மாணவர்கள் கவன சிதறல் இல்லாமல் கல்வி கற்பதற்கு யோகா உதவியாக இருக்கிறது. மத மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா கற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் ஏழு வகையான யோகா கற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 13 ஆயிரம் யோகா பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர் விரைவில் இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை எதுவும் இல்லை. அரசு பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் சிறிய அளவில் குழிகள் தோண்டப்பட்டு மாணவர்கள் நலன் கருதி தண்ணீர் சேமிக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்டதாக அரசின் கவனத்திற்கு வந்தது. கல்வித்துறை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து பள்ளி மறுநாளே திறக்கப்பட்டது.
பள்ளி பாடபுத்தகங்களில் தேசியகீதத்தில் உள்ள தவறினை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உத்தரவின்படி இந்த ஆண்டு 8 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்று ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணியினை இரண்டே ஆண்டில் முடித்துள்ளோம். இதனால் சிறிய பிழைகள் ஏற்பட்டுள்ளது. அவற்றை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் பொது மக்களிடம் ஆன்லைன் மூலம் கருத்து கேட்டு தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. மாணவர்களுக்கு தேர்வு கால அட்டவணையை ஒரு மாதம் கழித்து வெளியிடுவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்.
மேலும் ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என உள்ளது குறித்து கேட்டதற்கு, தமிழகத்தில் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் நடைபெறும் இந்த ஆட்சியில் எப்போதும் இரு மொழிக் கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.