ETV Bharat / state

1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? - சென்னை அண்மைச் செய்திகள்

1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு குறித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

குட்டீஸ் ஹேப்பி
குட்டீஸ் ஹேப்பி
author img

By

Published : Sep 29, 2021, 3:14 PM IST

சென்னை: தமிழ்நாடில் தற்போது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் மட்டும், தேர்தல் நடைபெறும் இரு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப்.29) நடைபெற்றது.

பள்ளிகள் திறக்க அனுமதி?

அப்போது 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது மன அழுத்தம், கற்றல் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் முதலமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டு, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நிலையான கரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, வருகின்ற நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் நடத்த அனுமதிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இதே போன்று 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் - அனுமதியளித்தார் முதலமைச்சர்

சென்னை: தமிழ்நாடில் தற்போது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் மட்டும், தேர்தல் நடைபெறும் இரு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப்.29) நடைபெற்றது.

பள்ளிகள் திறக்க அனுமதி?

அப்போது 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது மன அழுத்தம், கற்றல் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் முதலமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டு, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நிலையான கரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, வருகின்ற நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் நடத்த அனுமதிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இதே போன்று 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் - அனுமதியளித்தார் முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.