ETV Bharat / state

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்தால் கருப்பு பூஞ்சை வராமல் தடுக்கலாம்!

author img

By

Published : Jun 22, 2021, 8:53 PM IST

Updated : Jun 23, 2021, 8:55 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்படுவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் பிரகாஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கருப்பு பூஞ்சை சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் தயார்
கருப்பு பூஞ்சை சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் தயார்

கரோனா தொற்று இரண்டாவது அலையின்போது வடமாநிலங்களில் முதலில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டது. தற்போது தமிழ்நாட்டிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த நோய் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே கடந்த ஆண்டுகளில் கண்டறியப்பட்டது. தற்போது கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனைத் தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. அதன் பலனாக தற்பொழுது கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலையில் ஜூன் 21ஆம் தேதிவரையில் அரசு மருத்துவமனைகளில் 1,857 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 653 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அந்த சிசிக்கையை மேற்கொள்ளும் நபர்களிடம் தனியார் மருத்துவமனைகள் சிடி ஸ்கேன், பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது. அதனை மீறி கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார் வந்தால் அந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கருப்பு பூஞ்சைக்கு தானாக மருந்து எடுக்க கூடாது

கருப்பு பூஞ்சைக்கு தானாக மருந்து எடுக்க கூடாது

கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சை அளிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறும்போது, "கருப்பு பூஞ்சை கரோனா தொற்று பாதிப்புகள் வருவதற்கு முன்னரே வழங்கமாக இருக்கும் நோய்தான். மாதம் 5 முதல் 6 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆண்டிற்கு 60 பேருக்கும் மேல் கண்டறியப்பட்டது.

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் இந்நோய் வருகிறது. மீண்டும் கரோனா தொற்று குறைந்துவருகிறது. கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் கட்டுப்பாட்டில் உள்ளது. கரோனா இரண்டாவது அலையில் 2,510 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதில், 110 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். மற்றவர்களும் நலமுடன் இருக்கின்றனர். இந்த சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பில் உள்ளது.

கரோனா மூன்றாவது அலை குழந்தைகளுக்குத்தான் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு பூஞ்சை நோய் சர்க்கரை வியாதி உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்து அதிகம் பயன்படுத்துபவர்களுக்குத்தான் வருகிறது. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டால் இந்நோய் வராமல் தடுக்கலாம். சர்க்கரை நோய்க்கு ஸ்டீராய்டை மருந்தை தானாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

மூக்கில் வலி, கண் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தானாக மருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது. கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அரசு அறிவித்துள்ளது. மேலும் சிசிச்சைக்கான வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு, சிகிச்சை முறைகளும் வகுக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துமனைகளில் 30 விழுக்காடு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் மருத்துவ சேவை இயக்குநர் கண்காணித்து கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார். மேலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மருத்துவ வல்லுநர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

கருப்பு பூஞ்சை மூளையைப் பாதிக்கும்

கருப்பு பூஞ்சை மூளையைப் பாதிக்கும்

அரசு எழும்பூர் கண் மருத்துவமனையின் இயக்குநர் பிரகாஷ் கூறும்போது, "கருப்பு பூஞ்சை நோய் புதிய நோய் அல்ல. கடந்த ஆண்டுகளில் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுவந்தது. தற்பொழுது கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. கரோனா தொற்றின் தாக்கம் குறைந்துவருவதால், புதியதாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 2 வாரங்களில் குறைய வாய்ப்புள்ளது.

கருப்பு பூஞ்சை நோய் காற்றில் உள்ளது. அது மூக்கு, வாய் வழியாகத்தான் மனித உடலில் செல்லும். லேப்ராஸ்கோபி பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் காது மூக்கு தொண்டை நிபுணர்கள் கருப்பு பூஞ்சை நோய் இருப்பதை கண்டறிவார்கள். அதன் தாக்கம் கண்ணில் உள்ளதா? என்பதை கண் மருத்துவர்கள் பரிசோதனை செய்வோம். கண்ணில் பாதிப்பு கண்டறியப்பட்டால், அதன் மூலம் மூளையில் பாதிப்பு ஏற்படும். எனவே கண்ணில் நேரடியாக மருந்து செலுத்துவோம்.

கருப்பு பூஞ்சை நோய்க்கு காது மூக்கு தொண்டை மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், கண் மருத்துவர்கள் இணைந்து அறுவை சிகிச்சை மேற்கொள்வோம். கருப்பு பூஞ்சை நோய் காற்று, நீர், மண் ஆகியவற்றில் உள்ளது. எனவே கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 75 விழுக்காடு பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கரோனா தொற்று வந்தாலும், அதன் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை" என்றார்.

கருப்பு பூஞ்சை மூளையை பாதிக்கும்

இதையும் படிங்க: டெல்டாவைத் தொடர்ந்து டெல்டா பிளஸ் வகை கரோனா!

கரோனா தொற்று இரண்டாவது அலையின்போது வடமாநிலங்களில் முதலில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டது. தற்போது தமிழ்நாட்டிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த நோய் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே கடந்த ஆண்டுகளில் கண்டறியப்பட்டது. தற்போது கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனைத் தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. அதன் பலனாக தற்பொழுது கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலையில் ஜூன் 21ஆம் தேதிவரையில் அரசு மருத்துவமனைகளில் 1,857 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 653 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அந்த சிசிக்கையை மேற்கொள்ளும் நபர்களிடம் தனியார் மருத்துவமனைகள் சிடி ஸ்கேன், பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது. அதனை மீறி கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார் வந்தால் அந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கருப்பு பூஞ்சைக்கு தானாக மருந்து எடுக்க கூடாது

கருப்பு பூஞ்சைக்கு தானாக மருந்து எடுக்க கூடாது

கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சை அளிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறும்போது, "கருப்பு பூஞ்சை கரோனா தொற்று பாதிப்புகள் வருவதற்கு முன்னரே வழங்கமாக இருக்கும் நோய்தான். மாதம் 5 முதல் 6 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆண்டிற்கு 60 பேருக்கும் மேல் கண்டறியப்பட்டது.

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் இந்நோய் வருகிறது. மீண்டும் கரோனா தொற்று குறைந்துவருகிறது. கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் கட்டுப்பாட்டில் உள்ளது. கரோனா இரண்டாவது அலையில் 2,510 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதில், 110 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். மற்றவர்களும் நலமுடன் இருக்கின்றனர். இந்த சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பில் உள்ளது.

கரோனா மூன்றாவது அலை குழந்தைகளுக்குத்தான் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு பூஞ்சை நோய் சர்க்கரை வியாதி உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்து அதிகம் பயன்படுத்துபவர்களுக்குத்தான் வருகிறது. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டால் இந்நோய் வராமல் தடுக்கலாம். சர்க்கரை நோய்க்கு ஸ்டீராய்டை மருந்தை தானாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

மூக்கில் வலி, கண் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தானாக மருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது. கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அரசு அறிவித்துள்ளது. மேலும் சிசிச்சைக்கான வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு, சிகிச்சை முறைகளும் வகுக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துமனைகளில் 30 விழுக்காடு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் மருத்துவ சேவை இயக்குநர் கண்காணித்து கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார். மேலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மருத்துவ வல்லுநர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

கருப்பு பூஞ்சை மூளையைப் பாதிக்கும்

கருப்பு பூஞ்சை மூளையைப் பாதிக்கும்

அரசு எழும்பூர் கண் மருத்துவமனையின் இயக்குநர் பிரகாஷ் கூறும்போது, "கருப்பு பூஞ்சை நோய் புதிய நோய் அல்ல. கடந்த ஆண்டுகளில் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுவந்தது. தற்பொழுது கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. கரோனா தொற்றின் தாக்கம் குறைந்துவருவதால், புதியதாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 2 வாரங்களில் குறைய வாய்ப்புள்ளது.

கருப்பு பூஞ்சை நோய் காற்றில் உள்ளது. அது மூக்கு, வாய் வழியாகத்தான் மனித உடலில் செல்லும். லேப்ராஸ்கோபி பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் காது மூக்கு தொண்டை நிபுணர்கள் கருப்பு பூஞ்சை நோய் இருப்பதை கண்டறிவார்கள். அதன் தாக்கம் கண்ணில் உள்ளதா? என்பதை கண் மருத்துவர்கள் பரிசோதனை செய்வோம். கண்ணில் பாதிப்பு கண்டறியப்பட்டால், அதன் மூலம் மூளையில் பாதிப்பு ஏற்படும். எனவே கண்ணில் நேரடியாக மருந்து செலுத்துவோம்.

கருப்பு பூஞ்சை நோய்க்கு காது மூக்கு தொண்டை மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், கண் மருத்துவர்கள் இணைந்து அறுவை சிகிச்சை மேற்கொள்வோம். கருப்பு பூஞ்சை நோய் காற்று, நீர், மண் ஆகியவற்றில் உள்ளது. எனவே கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 75 விழுக்காடு பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கரோனா தொற்று வந்தாலும், அதன் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை" என்றார்.

கருப்பு பூஞ்சை மூளையை பாதிக்கும்

இதையும் படிங்க: டெல்டாவைத் தொடர்ந்து டெல்டா பிளஸ் வகை கரோனா!

Last Updated : Jun 23, 2021, 8:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.