ETV Bharat / state

அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு பேசிய வழக்கு: ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு நிபந்தனை ஜாமீன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 10:24 PM IST

RBVS Manian: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டதால், விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு
ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தியாகராயநகரில் கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா.செல்வம் புகாரளித்தார்.

இதன் அடிப்படையில் மணியன் மீது வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர், அவரை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணியன், ஜாமீன் கோரிய மனு ஏற்கனவே தள்ளுபடியான நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மணியன் சார்பில் அவரது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. உடல்நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மணியன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மணியனுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினமும் காலை ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நரிக்குறவ சமுதாய மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்ற தஞ்சை சுற்றுலா வளர்ச்சி குழுமம்..!

சென்னை: தியாகராயநகரில் கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா.செல்வம் புகாரளித்தார்.

இதன் அடிப்படையில் மணியன் மீது வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர், அவரை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணியன், ஜாமீன் கோரிய மனு ஏற்கனவே தள்ளுபடியான நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மணியன் சார்பில் அவரது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. உடல்நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மணியன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மணியனுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினமும் காலை ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நரிக்குறவ சமுதாய மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்ற தஞ்சை சுற்றுலா வளர்ச்சி குழுமம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.