32 மாவட்டங்கள் கொண்ட தமிழ்நாட்டில் புதிதாக கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்துார், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்குவதற்கான அறிவிப்பாணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக அறிவித்தார். அதனடிப்படையில் இவை மாவட்டங்களாக பிரிந்து செயல்பட்டுவருகின்றன .
இந்நிலையில், உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகங்கள் கட்டுவதற்கான நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.